7
June, 2026

A News 365Times Venture

7
Sunday
June, 2026

A News 365Times Venture

TVK: 'அன்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்; ஆனால், இன்று…' – தவெக-வில் இணைந்த கடம்பூர் ராஜூ

Date:

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜூ. அடிப்படையில் ஒரு இடைநிலை ஆசிரியர். இதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.  

எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றினால் ஆசிரியர் பணியிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து முழுநேர அரசியல்வாதி ஆனார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடம்பூர் ராஜூ

தொடர்ந்து, 2016-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்ற பெற்ற அவருக்கு தமிழக அமைச்சரவையில் செய்தி மக்கள் தொடர்பு மற்று விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் முறையாக மீண்டும் எம்.எல்.ஏ., ஆனார்.

அ.தி.மு.க., அ,ம,மு.க., மற்றும் சி.பி.எம் என மும்முனைப் போட்டி நிலவிய அந்தத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரனை 12,403 வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தியவர். கோவில்பட்டி தொகுதிக்குள் அவர் சார்ந்த சமூகம் தாண்டி தனக்கெனத் தனி செல்வாக்குடன் வலம் வந்தவர்.

”அரசியலுக்கு விஜய் ஒரு கத்துக்குட்டி. அ.தி.மு.க-வைப் பற்றிப் பேச விஜய்க்கு எந்த உரிமையும் கிடையாது.

பனையூர் அலுவலகத்திற்கு செல்லும் கடம்பூர் ராஜூ
பனையூர் அலுவலகத்திற்கு செல்லும் கடம்பூர் ராஜூ

நான் அமைச்சராக இருந்தபோது விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்தார். நானும் உடன் இருந்தேன். அந்த நன்றி மறந்து அவர் பேசக்கூடாது. ”விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை” என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும் நிலை ஏற்பட்டது.

தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் எனக்கூறி 3 மணி நேரம் காத்திருந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். சாத்தியமே இல்லாத நேரத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தார். நேரில் வந்துவிட்டாரே என விஜய்க்காக உதவியவர் எடப்பாடி பழனிசாமி.

இரவோடு இரவாக பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. ”வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனாக இருப்பேன்” எனச் சொன்னவர்தான் விஜய். ஆனால், இன்று அ.தி.மு.கவை விமர்சனம் செய்கிறார். விஜய்க்கு அ.தி.மு.க பல வழிகளில் உதவி செய்துள்ளது” என்று முந்தைய தேர்தல் பரப்புரை எடப்பாடி பழனிசாமி வீட்டில் விஜய்யுடன் கடம்பூர் ராஜூ அமர்ந்திருக்கும் புகைப்படத்தைக் காட்டிப் பேசினார்.

விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் அரசு வழங்கிய இலவசப் பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை மக்கள் தூக்கி எரிவது போல இடம் பெற்ற காட்சியை நீக்க வேண்டும் என கடம்பூர் ராஜூ, படக்குழுவினர் மட்டுமல்லாமல் விஜய்யையும் தொடர்பு கொண்டுப் பேசினார்.

கடம்பூர் ராஜூவின் தொடர் நெருக்கடியால்தான் அந்தக் காட்சிகள் பிளர் செய்யப்பட்டன.

விஜய்யுடன் கடம்பூர் ராஜூ
விஜய்யுடன் கடம்பூர் ராஜூ

தொடர்ந்து பரப்புரையில் த.வெ.கவையும், விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வந்தார் கடம்பூர் ராஜூ. ”அ.தி.மு.க ஒரு ஆலமரம் அதனை யாராலும் சாய்க்க முடியாது. நான் அம்மாவின் உண்மைத் தொண்டன்” என்றெல்லாம் பேசிவிட்டு தற்போது த.வெ.க-வில் இணைந்துள்ளதை அ.தி.மு.கவினரே விமர்சித்து வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' – அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக இன்னொரு இயக்கம் கூடியிருக்கிறது.பாஜகவில் இருந்து விலகி...

மீண்டும் உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் மக்கள் | Live Updates

சவால் விட்ட ஆர்.எஸ். பாரதி!உள்ளாட்சித் தேர்தலில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது...

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" – ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ்...

`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ – சி.பி.ஐ., முத்தரசன்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய...