18
August, 2026

A News 365Times Venture

18
Tuesday
August, 2026

A News 365Times Venture

வண்ணாங்கோவில்: ஆபத்தான முறையில் காத்திருக்கும் மாணவர்கள் – பேருந்து நிறுத்தம் எப்போது அமைக்கப்படும்?

Date:

திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பேருந்தில் ஏறி, இறங்குவதற்கான முறையான பேருந்து நிறுத்தம் இருபுறங்களிலும் இல்லாதது தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி, அப்பகுதி பொதுமக்களும் தினசரி பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பைபாஸ் சாலையின் இருபுறங்களிலும் பேருந்து நிறுத்தம் இல்லாததால், பேருந்துக்காக சாலையோரத்திலேயே காத்திருந்து, பேருந்து வந்தவுடன் சாலையிலேயே நின்று ஏறி இறங்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக பள்ளி மாணவர்களின் நிலை இன்னும் சிரமமாக உள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்களில் போதிய இடவசதி இல்லாததால், சில நேரங்களில் பள்ளி மாணவர்கள் சாலையோரத்திலேயே உட்கார்ந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பேருந்து வந்தவுடன் அவசரமாக எழுந்து சாலைக்குச் சென்று பேருந்தில் ஏறிச் செல்லும் நிலையும் காணப்படுகிறது.

அதிக வாகனங்கள் செல்லும் பிரதான பைபாஸ் சாலையில் சிறுவர்கள் இவ்வாறு சாலையோரத்தில் காத்திருப்பதும், பேருந்து வரும்போது சாலைக்குச் சென்று ஏறுவதும் பெற்றோர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், மழைக்காலம் தொடங்கும் நிலையில் இந்தச் சிரமம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மழையில் நனையாமல் காத்திருக்க நிழற்குடை மற்றும் பாதுகாப்பான காத்திருப்பு இடம் இல்லாததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருச்சி–திண்டுக்கல் பைபாஸ் சாலையில் வண்ணாங்கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் முறையான பேருந்து நிறுத்தம், நிழற்குடை மற்றும் பாதுகாப்பான பயணிகள் காத்திருப்பு பகுதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த அடிப்படைத் தேவைக்கு, 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தீர்வு கிடைக்குமா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'இந்தியாவின் கடனை அடைக்க பலே ஐடியா!' – அமைச்சர் கில்லி சரத்தின் '10' பொன் மொழிகள்

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய மனிதவள...

'கைவிட்ட காவல்துறை; கட்டுக்கடங்காத கூட்டம்… உயிர்பிழைத்து வந்ததே..!'- விசிக மாநாட்டில் நடந்ததென்ன?

வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும்,...

இந்தியாவைப் பார்த்து அமெரிக்காவும் மாறுகிறதா? வாக்காளர் அட்டைக்கு புதிய சட்டம் – ட்ரம்ப் பிளான்!

1982-ம் ஆண்டில் முதன்முறையாக சோதனை முயற்சியாக இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப்...

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்:“Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் தவறில்லையே" – நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூரில் நேற்று விசிக-வினர் சாலமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த வழியில்...