7
June, 2026

A News 365Times Venture

7
Sunday
June, 2026

A News 365Times Venture

CJP: டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் – ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம்!

Date:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக அமெரிக்காவிலிருந்து இன்று இந்தியா திரும்பிய அவருக்கு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்துடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய அபிஜீத் திப்கேவுக்கு ஆதரவாக, “ஜெய் பீம்”, “அபிஜீத் திப்கே ஜிந்தாபாத்” என அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Abhijeet Dipke

அங்கிருந்து அவர் நேரடியாகப் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்டார். முன்னதாக அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, “என் விதியை அரசியலமைப்பின் கைகளில் ஒப்படைக்கிறேன்” என Jaibhim என்ற ஹேஷ்டேக்குடன் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அபிஜீத் திப்கேவைப் பார்ப்பதற்காகப் பல்வேறு தரப்பு மக்களும் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விமான நிலைய ஊழியரான மிதிலேஷ் குமார் தனது பணி முடிந்ததும் திப்கேவைக் காண ஓடிவந்ததாகக் கூறினார்.

“இந்தியாவுக்கு இவரைப் போன்ற ஒரு இளைஞர் தலைவர்தான் தேவை. எங்களின் பல பிரச்சனைகளுக்கு இவரால் தீர்வு காண முடியும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். போஸ்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியான திப்கேவின் இந்த இயக்கம், தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஜார்கண்டிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலர் விஜய் குமார் கூறுகையில், “மக்களுக்கு இந்த இயக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், இது ஒரு அரசியல் கட்சியாக மாறக்கூடாது; கட்சியாக மாறும் நாளில் இந்த இயக்கம் அழிந்துவிடும்” என்று எச்சரித்தார்.

Abhijeet Dipke
Abhijeet Dipke

அதேபோல், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க வந்த 23 வயது இளம்பெண் குஷ்பு, “அவரைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். எங்களுக்கு மோடி அரசு மீது நம்பிக்கை இல்லை, ஆனால் திப்கே எங்களுக்காக ஏதாவது செய்வார் என்று நம்புகிறோம்” என்றார். நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக திப்கே தொடங்கிய ஆன்லைன் மனுவில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மீண்டும் உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் மக்கள் | Live Updates

சவால் விட்ட ஆர்.எஸ். பாரதி!உள்ளாட்சித் தேர்தலில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது...

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" – ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ்...

`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ – சி.பி.ஐ., முத்தரசன்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய...

`ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்! – தவெக-வில் தஞ்சமடைந்த உடுமலை ராதாகிருஷ்ணனின் பின்னணி

உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். விவசாய குடும்ப பின்னணி...