25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

Operation Sindoor: “மே 9 – இரவு 9 மணி, பாகிஸ்தானுக்கு நல்ல பாடம்..!'' – இந்திய ராணுவத்தின் வீடியோ

Date:

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி வீடியோவை வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம்.

அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, “திட்டமிடப்பட்டது, பயிற்சியளிக்கப்பட்டது மற்றும் முடிக்கப்பட்டது. நீதி வழங்கப்பட்டது” என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஹேஷ்டேக்குகளாக ‘பலமான மற்றும் திறமையான’ (#StrongAndCapable) என்றும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ (#OpSindoor) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர், “இது அனைத்தும் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தொடங்கியது. எங்களுடைய கோபம் உருகிய எரிமலை போல உள்ளது.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

அந்த நேரத்தில் ஒரே ஒரு சிந்தனை தான் ஓடிக்கொண்டிருந்தது. அது, ‘அவர்கள் தலைமுறைகள் மறக்காதாவறு பாடம் கற்றுத்தர வேண்டும்’ என்பது தான்.

இது பழிவாங்கு நடவடிக்கை அல்ல, இது நீதி. மே 9-ம் தேதி இரவு, இரவு 9 மணியளவில் போர் நிறுத்தத்தை மீறிய அனைத்து எதிரி படைகளும் அழிக்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் வெறும் நடவடிக்கை அல்ல; பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கற்றுகொடுக்கப்படாத ஒரு பாடம் ஆகும்” என்று பேசியுள்ளார்.

அந்த வீடியோ இதோ…


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்?

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை...

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக...

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு

சட்டவிரோதக் குடியேற்றம், உலக நாடுகளின் மீது வரி விதிப்பு... என்கிற அமெரிக்க...

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' – அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில்...