26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

India-Pakistan: “அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்.. ஆனால்'' – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

Date:

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹோண்டுராஸ் தூதரகத்தின் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்று உரையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியை திரும்பப் பெறுவது மட்டுமே காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரே பிரச்னை.

ஜம்மு காஷ்மீர்

அதே நேரத்தில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிரந்தரமாக நிறுத்தும் வரை சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். எனவே எங்கள் நிலைப்பாடு மிக மிகத் தெளிவாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்திய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்குச் சென்றார்.

ஷெபாஸ் ஷெரீப்

அங்கு ​​இந்தியாவுடனான சமீபத்திய இராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “நாங்கள் இந்தியா உடன் அமைதிக்காகப் பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான பேச்சு வார்த்தை நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்னையும் அடங்கும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும் லடாக் யூனியன் பிரதேசமும் எப்போதும் அதன் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாகவே இருக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறார் ஆ.ராசா’’ – அமைச்சர் வன்னி அரசு சூசகம்!

ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்....

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! – அதிகாரிகள் சொல்வதென்ன?

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல்...

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்; செயல்பாடுகளில் மர்மம்; CBCID விசாரணை வேண்டும்' – பெ.சண்முகம் அறிக்கை

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள் நடக்கிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும்'...

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட...