29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

EPFO 3.0: "வருங்கால வைப்புநிதி பணத்தை இனி ATMலேயே எடுக்கலாம்" – மத்திய அமைச்சர் சொல்வதென்ன?

Date:

தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியை (EPFO) ஏடிஎம்-களில் எடுக்கும் அம்சம் அமல்படுத்தவிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கானா மண்டல அலுவலகத்தின் EPFO ​​அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்த பிறகு பேசிய அவர், “மத்திய அரசு விரைவில் EPFO ​​3.0 பதிப்பை அறிமுகப்படுத்தும். இது சந்தாதாரர்கள் ஏடிஎம்களிலிருந்தே வைப்பு நிதியை எடுப்பதற்கு அனுமதிக்கும். அதாவது ‘EPFO 3.0 பதிப்பு’ வங்கி அமைப்புக்குச் சமமானதாக இருக்கும்.

Provident Fund

ஒரு வங்கியில் பரிவர்த்தனைகள் எப்படி மேற்கொள்ளப்படுகிறதோ, அது போல, உங்களிடம் இருக்கும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மூலம், எல்லா வேலைகளையும் செய்துகொள்ள முடியும். நீங்கள் EPFO ​​அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. முதலாளியிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது உங்கள் பணம். நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை எடுக்கலாம். மேலும் பல புதிய அம்சங்களும் அதன் மூலம் நடைமுறைக்கு வரும். தற்போது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், EPFO சில சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு வருகிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தொண்டை சரியில்ல' – ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும்...

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது...

மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய...

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு...