10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' – கனிமொழி ட்வீட்

Date:

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

மத்திய அமைச்சரின் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் குரலெழுப்பப்பட்டது. ஆளும் கட்சி மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியும் பிற அரசியல் அமைப்புகளும் மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்திய குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர் பேசியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தின.

அவர், “ஒரு குறிப்பிட்ட பகுதியை கைப்பற்ற வேண்டுமென்றால் அதன் கலாசாரத்தை கையகப்படுத்த வேண்டும். அதன் மொழியை அழிக்க வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்கள், நம்முடைய வழிபாட்டுத் தலங்களுக்கு மேல் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதன் மூலம் அதையே செய்தார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர்

98வது அகில பாரத மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான உரையாடலில் அவர், “நமது மொழி செழிக்கவில்லை என்றால், நமது வரலாறும் செழிக்காது” எனப் பேசியுள்ளார்.

Kanimozhi ட்வீட்

ஜெக்தீப் தன்கரின் பேச்சை சுட்டிக்காட்டி, இந்தித் திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்திருக்கிறார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

முற்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மொழியை அழிக்க முயன்றாகக் கூறும் ஜெக்தீப் தன்கரின் பேச்சை, இன்று மத்திய அரசு இந்தியை திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் மொழி மற்றும் கலாசாரத்தை சிதைக்க முயல்வதாக பொருள்படும்படி ட்வீட் செய்துள்ளார் கனிமொழி.

ஜகந்தீப் தன்கரின் பேச்சு குறித்த செய்தியை ரீ ட்வீட் செய்து, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என ட்வீட் செய்துள்ளார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு...

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' – தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து...

தமிழ்த்தாய் வாழ்த்து: “பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" – முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய...

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள்...