25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

துபாயிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு – ஏன் தெரியுமா?

Date:

துபாயில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது சம்பந்தமாக புதிய விதிகளை விதித்துள்ளது மத்திய அரசு.

அதன் படி, இந்தியா – ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், முகவர் நிறுவனங்கள், தகுதிவாய்ந்த நகைக்கடைக்காரர்கள் மற்றும் கட்டண விகித ஒதுக்கீடு (TRQ) வைத்திருப்பவர்கள் மட்டுமே இனிமேல் துபாயிலிருந்து தங்கம் இறக்குமதியை செய்ய முடியும்.

இந்தக் கட்டுப்பாடுகள் வெட்டப்படாத, பகுதியளவு பதப்படுத்தப்பட்ட, தூளாக உள்ள தங்கம் மற்றும் வெள்ளிகளுக்குப் பொருந்தும்.

துபாய்

சி.இ.பி.ஏ-ன் கீழ், பலர் சட்டவிரோதமாக, தங்கத்தைப் பிளாட்டினம் என்று கூறி இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து வந்தனர். இதைத் தடுக்கவே, இப்போது இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இனி, சி.இ.பி.ஏ-ன் கீழ், பிளாட்டினத்தை இறக்குமதி செய்ய ஒத்திசைவு நடைமுறை (Harmonised System) பின்பற்றப்படும். அதாவது, பிளாட்டின இறக்குமதிகளுக்கு ஒரு எண் வழங்கப்பட்டு, அதன் படி இறக்குமதி நடக்கும். இந்த நடைமுறை குறித்து கடந்த மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது.

இந்த ஒத்திசைவு நடைமுறை 99 சதவிகித அல்லது உயர் தர பிளாட்டின இறக்குமதிகளுக்குப் பின்பற்றப்படும்.

ஆக, இவைகளின் மூலம் மோசடி தங்கம் இறக்குமதியைத் தடுக்கமுடியும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்?

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை...

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக...

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு

சட்டவிரோதக் குடியேற்றம், உலக நாடுகளின் மீது வரி விதிப்பு... என்கிற அமெரிக்க...

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' – அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில்...