10
June, 2026

A News 365Times Venture

10
Wednesday
June, 2026

A News 365Times Venture

கோவை சிறுமி கொலை: "ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை" – தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி விமர்சனம்

Date:

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதின்று மாலை சமூக விரோதிகளால் இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து, பொது மக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளானது. சமூக குற்றங்கள் நிகழ போதை பொருட்கள் கலாசாரம் அதிகரித்தது, மிக முக்கிய காரணமாக விளங்கியது.

இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது.

இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

கார்த்தி, மோகன்ராஜ்

மேலும், இதுபோன்ற சமூக குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து, அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்தி, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், வரும் காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடைபெறமால் தடுக்க, போர் கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு விரைவில் நீதி கிடைக்கவும், அக்குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வில் இருந்து பிளவுபட்ட எஸ்.பி. வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவினருக்கு த.வெ.க. அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், எஸ்.பி. வேலுமணி த.வெ.க. அரசை விமர்சித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஈரான்; 'தற்காப்புத் தாக்குதல்' நடத்திய அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. நேற்று ஈரான், அமெரிக்க ராணுவத்தின்...

'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' – எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில்

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ்...

3 செய்தி தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசு விளக்கம்

செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் ...

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' – சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ...