ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா.
நேற்று ஈரான், அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதற்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது அமெரிக்க ராணுவம்.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் (CENTCOM) தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது…
“அமெரிக்க ராணுவத்தின் ‘அப்பாச்சி’ (Apache) ரக ஹெலிகாப்டர் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் இன்று மாலை 5 மணி (ET) அளவில் ஈரானுக்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களைத் தொடங்கின.
ஈரானின் அநியாயமான ஆக்கிரமிப்புக்கு இணையாகக் கொடுக்கப்பட்ட தகுந்த பதிலடியே இந்த ராணுவ நடவடிக்கையாகும்”.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது…
“நேற்று இரவு ஹார்முஸ் நீர்ச்சந்திப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நம்முடைய அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக நமது பெருமைமிகு ராணுவம் தற்போது எனக்குத் தகவல் தெரிவித்துள்ளது.
அதில் இரண்டு பைலட்டுகள் இருந்தனர், நல்லவேளையாக அவர்கள் இருவரும் எந்தக் காயமும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்.
இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா தகுந்த முறையில், கண்டிப்பாகப் பதிலடி கொடுத்தே தீர வேண்டும்”.




