21
April, 2026

A News 365Times Venture

21
Tuesday
April, 2026

A News 365Times Venture

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" – ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

Date:

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவிற்கும் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கும் நீண்டகாலமாகவே முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – பிரேசில் அதிபர் லூலா

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு நாளிதழான ‘எல் பெயிஸ்’ (El Pais) இதழுக்கு அளித்த பேட்டியில், ட்ரம்ப் மற்ற நாடுகளை மிரட்டும் போக்கைக் கையாளுவதாக லூலா குற்றம் சாட்டியிருக்கிறார். அதில் அவர்,

“ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதும் உலகை அச்சுறுத்தி போர்களை அறிவிக்கும் ஒரு நாட்டின் அதிபர் உடன் நம்மால் வாழ முடியாது.

மக்கள் பட்டினியால் வாடும் வேளையில், உலகம் $2.7 ட்ரில்லியனை ஆயுதங்களுக்காகச் செலவிடுகிறது. பூமியை கார்பன் உமிழ்வில் இருந்து மீட்பது பற்றிப் பேசிக்கொண்டே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாடுகள் மீதும் குண்டுகள் வீசப்படுகின்றன.

பிரேசில் அதிபர் லூலா
பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை. உலகத் தலைவர்கள் அனைவரும் அமைதியைப் பேணவும், ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘கோவை தெற்கில் தி.மு.க வாக்காளர்களுக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்ததா?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி...

காட்பாடி: `ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி’ – வீடுதோறும் கடிதம்; கவனம் ஈர்த்த துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில்...

தமிழ்நாடு தேர்தல்: இன்று 6 மணியோடு எல்லாம் 'க்ளோஸ்'- விதிப்படி எதற்கெல்லாம் 'நோ' – மீறினால்?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் கடைசி மணிநேர அனலில் இருக்கிறது.இன்று மாலை...