4
May, 2026

A News 365Times Venture

4
Monday
May, 2026

A News 365Times Venture

கூட்டணி அமைத்ததில் வெற்றி; ஆனால், தொகுதியில் 'தோல்வி' – 'கை'கூடாத செல்வப்பெருந்தகை வெற்றி

Date:

காஞ்சிபுரத்தின் தனித் தொகுதியான ஶ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

திமுக – காங்கிரஸ் கூட்டணி அமையவே, ஓடியோடி உழைத்தது இவர்தான்.

ஶ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக அதிமுக களத்தில் நிறுத்திய நபர் பழனி. இவருக்கு அந்தத் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதது மிகப்பெரிய மைனஸ். அதனால், பழனி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

ஶ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை என்று எடுத்துக்கொண்டால், மக்களுக்கு இவர் மீது ‘பெரிய உடன்பாடு’ இல்லை.

செல்வப்பெருந்தகையின் வெற்றிக்கு கூட்டணி ‘கை’கள் பாடுபட்டாலும், எதுவும் ‘கை’கூடவில்லை.

செல்வப்பெருந்தகை

ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் பெரும்பான்மையாக பட்டியல் சமூக வாக்குகள் உள்ளன. அந்த வாக்குகளை கணிசமாக தவெகவின் வேட்பாளர் தென்னரசு அறுவடை செய்துவிட்டார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியை அமைத்ததில் வெற்றியைத் தழுவிய செல்வப்பெருந்தகை, தனது தொகுதியில் வெற்றி பெறவில்லை.

மூன்றாவது முறையாக ஶ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகைக்கு தோல்வி கிடைக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நீண்ட நாள்களுக்கு பிறகு இன்று பெருமையோடு உறங்குவேன்" – தோல்விக்குப் பிறகு TRB ராஜா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தோல்வியையடுத்து தற்போதைய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது...

போடி: கைகொடுத்த உள்ளூர் செல்வாக்கு; அதிமுக-வின் `கோட்டை'யில் திமுக-வின் ஓபிஎஸ் சாதித்தது எப்படி?

தமிழக அரசியலில் 'அமைதிப் படை'யாக அறியப்பட்டு, ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சர்...

‘இவனுக்கு பெரிய பெரிய கனவுகள் இருக்கு'னு அன்னைக்கு SAC சார் சொன்ன வார்த்தைகள்!' – ரபி பெர்னார்டு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் சென்னை...

'அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன், நான் எனது மனச்சாட்சிப்படியே.!' – ஸ்டாலின் உருக்கம்

234 சட்டமன்றத் தேர்தல்களில் தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தத்...