29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

காஷ்மீர் மக்களை காத்து நிற்கும் `S-400 சுதர்சன் சக்ரா' அதிநவீன பாதுகாப்பு பற்றி தெரியுமா?

Date:

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் வான்வழி தாக்குதலை நடைபெற்றுவருகிறது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலமாகவும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல்தாக்குதல் நடத்தி வருகிறது. அவற்றின் அதிவேக விமானங்களை வழிமறைத்து வீழ்த்துகிறது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு.

அதில் மிக முக்கியமானது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட S-400 சுதர்சன் சக்ரா என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு. இது நேற்றைய தினம் 15 ட்ரோன்களை வீழ்த்தியிருக்கிறது.

S-400 பாதுகாப்பு அமைப்பு

ஆசியாவிலேயே இந்த பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதனால் 600 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகனைகளை கண்காணிக்க முடியும், 400 கிலோமீட்ட எல்லைக்குள் வரும் ஏவுகனைகளை தடுத்து தாக்குதல் நடத்த முடியும்.

இந்தியா ரஷ்யா இடையே S-400 பாதுகாப்பு அமைப்பு தொகுப்புகளுக்காக 35,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

வாங்கப்பட்ட அனைத்து S-400 தொகுப்புகளும் இந்திய விமானப்படையின் கீழ் செயல்பாட்டில் உள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் இவற்றை நிறுவியுள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து வரவிருந்த மேலும் சில தொகுப்புகள் உக்ரைன் போரால் தடைபட்டுள்ளன.

ஹார்ப்பி ட்ரோன்கள் (HARPY Drones)

ஹார்ப்பி ட்ரோன்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியிருக்கின்றன.

இந்த ட்ரோன்கள் ரேடார் அமைப்புகளை சேதப்படுத்தி, ‘எதிரி வான் பாதுகாப்புகளை அடக்க்கும் (SEAD)’ வேலையைச் செய்கின்றன.

இதில் பெரும் வெடிப்பை ஏற்படுத்தும் ஏவுகணைகள் உள்ளன, அத்துடன் இலக்கில் (ரேடார்) இருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தன்னிச்சையாகக் கண்டறிந்து தாக்கும் சிறப்பு ரேடாரும் உள்ளது.

HARPY Drones

இது குறிப்பிட்ட பகுதியில் (டார்கெட்டட் ஏரியா) உள்ள இலக்கைக் குறிவைத்து தாக்கும்படி வடிவமைக்கப்பட்டது. இலக்கின் அதிர்வெண்ணைக் துரத்தி எந்த திசையிலிருந்தும் தாக்கக் கூடியது. இலக்கு வானில் பறந்துகொண்டிருந்தாலும், நிலத்தில் புதைந்திருந்தாலும் இந்த ட்ரோனிலிருந்து தப்ப முடியாது.

இது வானில் ஒன்பது மணிநேரம் தொடர்ந்து பறந்து தாக்குதல் நடத்தும். பகலானாலும் இரவானாலும் துல்லியமாக தாக்கும் திறன் பெற்றுள்ளது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' – திருமாவளவன் விளக்கம்!

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,...

ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைச் சுற்றி வரும் தவெக சஸ்பென்ஸ் பல நாள்களாக...

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல…' – தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு...

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக...