5
May, 2026

A News 365Times Venture

5
Tuesday
May, 2026

A News 365Times Venture

'அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன், நான் எனது மனச்சாட்சிப்படியே.!' – ஸ்டாலின் உருக்கம்

Date:

234 சட்டமன்றத் தேர்தல்களில் தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக பின்னடைவை சந்திருக்கும் நிலையில் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். “கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம்.

தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.

ஸ்டாலின்

வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே..!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன்.

என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்

அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இதை யாரும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டார்கள்" – ராகுல் காந்தி – விஜய் போன்கால்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து...

"நீண்ட நாள்களுக்கு பிறகு இன்று பெருமையோடு உறங்குவேன்" – தோல்விக்குப் பிறகு TRB ராஜா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தோல்வியையடுத்து தற்போதைய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது...

போடி: கைகொடுத்த உள்ளூர் செல்வாக்கு; அதிமுக-வின் `கோட்டை'யில் திமுக-வின் ஓபிஎஸ் சாதித்தது எப்படி?

தமிழக அரசியலில் 'அமைதிப் படை'யாக அறியப்பட்டு, ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சர்...

‘இவனுக்கு பெரிய பெரிய கனவுகள் இருக்கு'னு அன்னைக்கு SAC சார் சொன்ன வார்த்தைகள்!' – ரபி பெர்னார்டு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் சென்னை...