2
June, 2026

A News 365Times Venture

2
Tuesday
June, 2026

A News 365Times Venture

`அணி மாறுவதில் வைகோ 8 அடி பாய்ஞ்சா துரை 16 அடி பாய்வார்னு நிரூபிக்கிறார், அவ்வளவுதான்'- மல்லை சத்யா

Date:

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று பேசியது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல முதல்வர் விஜய் சென்றபோது அங்கு அவரை வரவேற்ற திருச்சி எம்.பி. துரை வைகோ, தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாமல் போனதற்காக ரொம்பவே ஃபீல் செய்து பேசியிருந்தார்.

மதிமுக-வும் தவெக பக்கம் கிளம்ப தயாராகி விட்டதையே துரையின் பேச்சு சுட்டிக் காட்டுவதாகச் சொல்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி திமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பதை முடிவு செய்ய இருக்கிறதாம்.

இந்தப் பின்னணியில் மதிமுக-வின் இந்த திடீர் அரசியல் நிலைப்பாடு குறித்து அந்தக் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறி திராவிட வெற்றிக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியிருக்கும் மல்லை சத்யாவிடம் பேசினோம்.

மல்லை சத்யா

‘’முப்பது வருஷமும் மூணு மாசமும் நாடாளுமன்ற உறுப்பினரா இருந்திருக்கார் வைகோ. இதுல இருபத்தொன்பது வருஷம் திமுக சார்பாதான் அனுப்பப் பட்டிருக்கார். பார்லிமென்ட் டைகர், அது இதுன்னு பெருமையா சொல்லிக்கிடுறாரே, அந்தப் பெருமைக்குக் காரணமான வாய்ப்பைத் தந்தது திமுக.

திமுக-வுல அண்ணன் ஸ்டாலினை எதிர்த்துதான் மதிமுக-வையே உருவாக்கினார். ஆனா அதுக்குப் பிறகும்கூட அந்தக் கசப்பையெல்லாம் மறந்துட்டு இவரை டெல்லிக்கு அனுப்பி வச்சார் ஸ்டாலின்.

போதாக்குறைக்கு இவரது மகனுக்கும் திருச்சி தொகுதியை வாங்கித் தந்து அவரையும் எம்.பி ஆக்கினாங்க. திருச்சி தொகுதி துரைக்கு கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டுச்சு. அந்தச் சமயத்துல நான் மதிமுக-வுல இருந்தேன்.

தொகுதியை காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் எதிர்பார்த்தார். ஆனாலும் வைகோ விடாப்பிடியா பையனுக்கு கேட்டதால மும்பையில இந்தியா கூட்டணிக் கூட்டத்துல இருந்த ராகுல் கிட்ட நேரடியாப் பேசி தொகுதியை வாங்கித் தந்தார் ஸ்டாலின்.

இவ்வளவு செஞ்சிருக்கற கட்சிக்கு நீங்க காட்டுகிற விசுவாசம்தான் ‘துரதிர்ஷ்டம்’கிற வார்த்தையா?

வைகோவை பொறுத்தவரை மைக் கிடைச்சா ஒன்ணைப் பேசறதும் நிஜத்துல அதற்கு நேர் மாறா நடக்கிறதும் பழகிப் போன விஷயம். ஒரு காலத்துலயும் அவர் கூட்டாளிங்க யாருக்கும் உண்மையானவரா நேர்மையானவரா இருந்ததில்லை.

அதிமுக கூட்டணியில இருந்த ஒரு சமயம் டெல்லிக்கு ஆதரவுக் கடிதம் கொடுக்கிற விஷயத்துல சேர்ந்து போகலாம்னு ஜெயலலிதா மேடம் சொல்லியிருக்க, அப்ப சரி சரின்னு தலையாட்டிட்டு சத்தமில்லாம போய் தனியா கொடுத்துட்டு வந்துட்டார். அப்ப அந்தம்மா இவர்கிட்ட கடுமையா கோபிச்சுக்கிட்டாங்க.

விஜய்
விஜய்

ஸ்டாலினுக்கு ஆதரவா இருப்பேன்னு கலைஞர் கிட்ட சத்தியம் செய்து கொடுத்திருக்கேன்னு பொது வெளியில சொல்லியிருக்கார் வைகோ. அதுபத்தி துரைக்கு தெரியுமா தெரியல.

இப்ப அந்த சத்தியம் என்ன ஆச்சு? வைகோவுக்கு இது புதுசு இல்லீங்க. இன்னும் சொல்லப் போனா கொளத்தூர் தொகுதியில அண்ணன் ஸ்டாலின் தோல்வியடைஞ்சதுக்கு தமிழ்நாட்டுல யார் யாரெல்லாம் வருத்தப் பட்டாங்களோ தெரியாது, ஆனா வைகோ உள்ளூர மகிழ்ந்திருப்பார்னு என்னால உறுதியாச் சொல்ல முடியும். அவ்வளவு வன்மம் அவர் மனசுல இருக்கு.

ஸ்டாலின்
திமுக | ஸ்டாலின்

சரி இப்ப உதயசூரியன் சின்னம் துரதிஷ்டமா தெரியுதுல்ல, அந்தச் சின்னத்துல போட்டியிட்ட உங்க உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்வீங்கன்னா அதுக்கு முன்னாடி துரையும் எம்.பி பதவியை ராஜினாமா செய்யணும். உதயசூரியன் தயவுல வாங்கின ஓட்டுலதானே ஜெயிச்சார். அதை செஞ்சுட்டு பிறகு என்ன முடிவுன்னாலும் எடுத்துக்கிடலாம். அணி மாறுவதில் வைகோ 8 அடி பாய்ஞ்சா துரை 16 அடி பாய்வார்னு நிரூபிக்கிறார், அவ்வளவுதான்” என்கிறார் சத்யா.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போலி கையொப்ப சிக்கல்; அதிகரிக்கும் அதிருப்தி… பிளவை நோக்கிச் செல்கிறதா மம்தா கட்சி?!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத்...

`விஜய் Bro… உங்களை இயலாதவர் என்று சொல்வதில் என்ன தவறு?'- முதல்வரின் விமர்சனங்களுக்கு ஆ.ராசா பதில்!

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் தேர்தலை...

எஸ்.பி.வேலுமணியை ’துரோகி' என்ற அதிமுக தொண்டர் – பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் பரபரப்பு!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார்...

`சுய விருப்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல; காவல்துறை அவர்களை..!' – உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மனிதக் கடத்தலைத் தடுக்கவும், வணிக ரீதியான பாலியல் சுரண்டலை ஒடுக்கவும்...