26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

Vijay: `இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை; அவரை விடுங்க’ – விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த சீமான்

Date:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொடங்கியபோது, அவரை வரவேற்றுப் பேசியவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடுக்குப் பிறகு, தன் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து கீழ் இறங்கினார். அதற்குப் பிறகு நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்து விமர்சித்துப் பேசிய சீமான், “இது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையல்ல. ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான். இது நடுநிலை அல்ல…கொடுநிலை.” என்றார் காட்டமாக.

சீமான்

இந்த நிலையில்தான் தற்போது பெரியார் குறித்தும், திராவிடக் கட்சி குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான், நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம், `தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி தொடங்கும்போதே பெரியார் திடலுக்குச் சென்று, அவரின் கொள்கையை அரசியலாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார். தற்போது அரசியலில் களத்துக்கும் வந்திருக்கிறார். இப்போது உங்கள் தம்பி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “அவரை விடுங்கள்… இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை… அவரை இழுக்காதீங்க… அவரை அப்படியே விட்ருவோம்” என அந்தக் கேள்வியை புறக்கணித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா...

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?

மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த...

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? – ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை...

"சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!"- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற...