25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

Vijay: `இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை; அவரை விடுங்க’ – விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த சீமான்

Date:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொடங்கியபோது, அவரை வரவேற்றுப் பேசியவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடுக்குப் பிறகு, தன் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து கீழ் இறங்கினார். அதற்குப் பிறகு நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்து விமர்சித்துப் பேசிய சீமான், “இது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையல்ல. ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான். இது நடுநிலை அல்ல…கொடுநிலை.” என்றார் காட்டமாக.

சீமான்

இந்த நிலையில்தான் தற்போது பெரியார் குறித்தும், திராவிடக் கட்சி குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான், நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம், `தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி தொடங்கும்போதே பெரியார் திடலுக்குச் சென்று, அவரின் கொள்கையை அரசியலாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார். தற்போது அரசியலில் களத்துக்கும் வந்திருக்கிறார். இப்போது உங்கள் தம்பி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “அவரை விடுங்கள்… இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை… அவரை இழுக்காதீங்க… அவரை அப்படியே விட்ருவோம்” என அந்தக் கேள்வியை புறக்கணித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....