25
April, 2026

A News 365Times Venture

25
Saturday
April, 2026

A News 365Times Venture

Pakistan: லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம்; மீண்டும் தாக்குதலா… என்ன நடந்தது?

Date:

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் வியாழக்கிழமை (மே 8) காலையில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இந்தியா பாகிஸ்தானில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் குண்டு வெடிப்பு சத்தத்தால் மக்கள் பீதியடைந்து, தங்கள் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டுள்ளனர்.

மூன்றுமுறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுவரையில் குண்டுவெடிப்பு சத்தத்துக்கான சரியான காரணம் தெரியவரவில்லை.

பஹல்காமில் 26 அப்பாவி இந்தியர்கள் படுகொலையில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள இந்தியா, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை நடத்தி முடித்திருக்கிறது.

இந்த நடவடிக்கையின்போது 31 அப்பாவி பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், இந்தியாவின் விமானங்கள் சுடப்பட்டதாக கூறுவது தவறான தகவல் எனக் கூறியுள்ளது.

பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய தாக்குதலில் 13 ந்தியர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்ததாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Operation Sindoor

Pakistan நிலை என்ன?

இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு இன்று (மே 8) காலையில் பெரும்பாலான பாகிஸ்தானிய நகரங்கள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளன. குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எல்லையை ஒட்டிய பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அரசு இந்தியாவின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி தரப்படும் எனக் உறுதியேற்றுள்ளது எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் பத்திரிகை பேட்டியில் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தான் லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் பேச்சுபொருளாகியிருக்கிறது.

இதற்கிடையில் உலக நாடுகள், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ராஜிவ் கொலையில் திமுகவுக்குச் சம்பந்தம் என்பதால்தான்…" – ராகுல் குறித்து சி.டி.ஆர் நிர்மல் குமார்

தவெகவின் இணைப் பொதுச்செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னை...

"குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறார்" – விஜய் மீது காவல் ஆணையாளரிடம் பரபரப்பு புகார்

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த வி.சி.க. தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன்...

தெலங்கானா : 'அப்பா முன்ன மாதிரி இல்ல!' – புது கட்சி தொடங்கிய சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!

தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்வின் மகள்...

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை; பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுமா?

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக்...