11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

Pahalgam Attack: பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கை முடக்கிய இந்திய அரசு; தொடரும் அதிரடிகள்!

Date:

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து (Pahalgam Attack) இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு வாகா எல்லை மூடல், சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது இந்திய அரசு.

இன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்கை இந்தியாவில் முடக்கி உள்ளது இந்திய அரசு. அதனால், இனி யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை பார்க்க முடியாது.

இந்தியா முடக்கிய பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு உள்ளது என்று வலுவாக இந்தியா சந்தேகிக்கிறது. இதையடுத்து தான் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்து வருகிறது.

ஆனால், ‘எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உலக அரங்கிலும் பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்தினால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய்க்கு எதிராக யாரை நிறுத்துவது? – தி.மு.க முகாமில் நடக்கும் டிஸ்கஷன்!

த.வெ.க தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்கிற...

இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய...

13 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருக்கும் மகன்; `கருணை கொலை' கோரிய பெற்றோர் – நீதிமன்றம் அனுமதி!

2013-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹரிஷ் ராணா என்ற மாணவர்...

இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம்...