28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

OPS : 'அமித் ஷா எங்களை அழைக்காதது வருத்தமே!' – மனம் திறந்த ஓ.பி.எஸ்

Date:

‘ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பு!’

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு ஓ.பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ‘அமித்ஷா சென்னை வந்தபோது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே.’ என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

OPS

‘NDA வில்தான் தொடர்கிறோம்!’

ஓ.பி.எஸ் பேசியதாவது, ‘நாங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துதான் சந்தித்தோம். இப்போதும் அதே கூட்டணியிலேயே நீடிக்கிறோம். யார் விரும்புகிறார்களோ இல்லையோ எங்களின் நிலைப்பாடு இதுதான். மாவட்டக் கழக நிர்வாகிகளை ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

அடுத்ததாக மாவட்டம் மாவட்டமாக தொண்டர்களை சந்திக்க உள்ளோம். மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைக்காதது வருத்தமே. அதிமுகவை ஜெயலலிதா உச்சாணிக் கொம்பில் வைத்துவிட்டு சென்றார். இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என தெரியும். ஆகவே பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு

OPS
OPS

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் 9 கட்சிகளும் இணைந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். எடப்பாடியை தவிர NDA வில் இருக்கும் அத்தனை தலைவர்களும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தபோதே நான் வாழ்த்தினேன். அவரின் அரசியலைப் பொறுத்தே அவர் எந்தத் திசையில் செல்கிறார் என சொல்ல முடியும். இதுவரை நல்ல திசையிலேயே செல்கிறார். அரசு நிர்வாகத்தில் திமுக தோல்வி அடைந்துவிட்டது.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது; அவரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" – திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று...

இந்தியா – வங்கதேசம் உறவில் விரிசலா? மோங்லா துறைமுக பொருளாதார மண்டலத்தைக் கைப்பற்றிய சீனா

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில்...

'இஸ்லாம் மதத்திற்கு மாறினால் பிற்படுத்தபட்ட வகுப்பு சான்றிதழ் கிடையாது’ – நீதிமன்றம் சொல்வது என்ன?

தூத்துக்குடியைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்...