22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

Operation Sindoor: `நாங்கள் ராணுவத்துடன் நிற்கிறோம்’ – ஜம்மு – காஷ்மீர் மக்கள்

Date:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதக் குழுவின் தலைமை இடங்கள், பயிற்சி மையங்கள் குறி வைத்து தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து ஜம்மு கஷ்மீரில் வாழும் மக்கள் இந்திய ராணுவத்தைப் பாராட்டி ‘இந்திய ராணுவம் ஜிந்தாபாத்’ ‘பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்கள் எழுப்புவதாக வீடியோ வெளியாகியிருக்கிறது.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய கஷ்மீரில் வாழும் ஒருவர் “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என நாங்கள் காத்திருந்தோம். இந்தத் தாக்குதல் ஆதாரத்துடன் நடந்துள்ளது. இந்த முறை யாரும் எந்த ஆதாரத்தையும் கேட்கப் போவதில்லை. நாங்கள் ராணுவத்துடன் நிற்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகத் தலைவர்கள் இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர், ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்தும் உள்ளனர்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கோவை தெற்கு தொகுதி தேர்தலை நிறுத்துங்கள்' – தர்ணாவில் இறங்கிய அதிமுக வேட்பாளர்!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் அதீத பணப்பட்டுவாடாவைத் தடுக்கத்...

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று...

`சாதி, மதமற்றவர்' சான்றிதழ்; நடைமுறை எதார்த்தமும் சட்டச் சிக்கல்களும் – ஓர் ஆழமான அலசல்!

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத் நிகழ்ச்சியில் தனது சாதி குறித்துப் பேசியது விமர்சனத்திற்குள்ளான...