26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

'EVM மெஷின்ல எந்த கோளாறும் இல்ல…' – ஸ்டாலினின் கொளத்தூர் 'தேர்தல் புகார்' முடித்து வைப்பு!

Date:

கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களை சரிபார்க்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. சோதனையின் முடிவில் மெஷின்களில் எந்த கோளாறும் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

EVM Verification

கொளத்தூரில் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோற்றிருந்தார். இதைத் தொடர்ந்து கொளத்தூரின் சில பூத்களில் திமுகவுக்கு சாதகமான வாக்காளர்கள் இருந்தும் குறைவான வாக்குகளே பதிவாகியிருப்பதாக மு.க.ஸ்டாலின் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் கொளத்தூரின் 14 பூத்களில் EVM மெஷின்களை சரிபார்க்கும் பணியை கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது.

ஒரு நாளைக்கு 2 பூத்களின் மெஷின்களை சரிபார்க்கும் பணி நடந்தது. முதலில் ஏப்ரல் 23 ஆம் தேதி பதிவான வாக்குகளை சரிபார்த்துவிட்டு, பின்னர் ஒரு மாதிரி வாக்குப்பதிவு போல நடத்தி வாக்குகள் சரியாக விழுந்து பதிவாகிறதா என்பதை அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்பு சரிபார்ப்பர். இந்த செயல்முறை இன்று வரை நடந்திருந்தது.

இடையில் திமுக சார்பில் இரண்டு பிரச்னைகள் எழுப்பப்பட்டது. விவிபாட் இயந்திரம் ஒன்று திடீரென பழுதானதை ஒரு புகாராக முன்வைத்தனர். பின்னர் இரண்டு மெஷின்களின் வெளிப்புறத்தில் சீரியல் நம்பர் இல்லை என்பதை புகாராக வைத்தனர்.

EVM Verification
EVM Verification

இந்த புகார்களை காரணம் காட்டி EVM சரிபார்க்கும் செயல்முறையிலிருந்து வெளியேறவும் செய்தனர். இதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பழுதான மெஷின்களுக்கு பதிலாக வேறு பூத்களின் மெஷின்களை தேர்வு செய்து கொடுத்தனர். அந்த மெஷின்களும் சரிபார்க்கப்பட்டன. இறுதியில் கொளத்தூரின் EVM மெஷின்களில் எந்த கோளாறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" – தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது,...

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா...

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?

மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த...

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? – ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை...