15
April, 2026

A News 365Times Venture

15
Wednesday
April, 2026

A News 365Times Venture

Delimitation: "நாங்கள் நடத்த விடமாட்டோம்" – தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ்

Date:

எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளிடையே நாளை(ஏப்ரல்.16) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.

இதில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு திருத்த மசோதாக்களை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

மோடி, அமித்ஷா

தொகுதி மறுவரையறை மூலம் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி நடப்பதாகக் கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அதேபோல தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனது எதிர்ப்பைத் தெரிவித்திருகிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், “தோல்வியின் பயம் தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் இந்த அரசு தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் திணிக்க முயல்கிறது.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது, நமது கூட்டாட்சி கட்டமைப்பை ஆபத்துக்குள்ளாக்கும். இந்த முயற்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதை நாங்கள் நடக்க விடமாட்டோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கும்போது…'- தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,...

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவால் முற்றுகை; இருந்தும், சீன கப்பல் பயணிக்கிறது – இது எப்படிச் சாத்தியம்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12), ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் உள்நுழையவும்,...

​"சங்கி கூட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் நம் முதல்வர்தான்" – உதயநிதி பெருமிதம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி...