26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' – விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

Date:

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் அன்பளிப்பாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, “நட்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் இது போன்ற அன்பளிப்பெல்லாம் ஒரு சாதாரண விஷயம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் இரு நாடுகளிலும் பேசுபொருளானது. இது குறித்து விளக்கமளித்த ட்ரம்ப், “இப்படிப்பட்ட பரிசை முட்டாள் தான் நிராகரிப்பான். இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுகிறது” என்றார்.

ட்ரம்ப் – கத்தார் பிரதமர்

இந்த விமானம் வழங்கப்படுவதன் மூலம் கத்தார் அமெரிக்காவுக்கு லஞ்சம் கொடுக்கிறது… அமெரிக்காவிடம் செல்வாக்கு பெற முயற்சிக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டது.

இதற்கு விளக்கமளித்திருக்கும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, “மக்கள் ஏன் ஒருவருக்கு கொடுக்கும் பரிசை லஞ்சமாகவோ அல்லது ட்ரம்ப் நிர்வாகத்துடன் கத்தார் செல்வாக்கை செலுத்துவதற்கான ஒரு வழியாகவோ கருதினர் என்பது தெரியவில்லை.

ஆனால் அமெரிக்காவில் உள்ள மக்களும் அங்குள்ள அரசியல்வாதிகளும்கூட, கத்தாரை ஒரு நண்பராக, நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறார்கள். தேவைப்படும் போதெல்லாம் நாமும் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Nepal Flood: நேபாளம் வெள்ளப் பெருக்கு; பீகாருக்கு அச்சுறுத்தல்!| live

நேபாளம் வெள்ளப் பெருக்கால் பீகாருக்கு அச்சுறுத்தல்!அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று...

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" – தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது,...

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா...

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?

மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த...