16
July, 2026

A News 365Times Venture

16
Thursday
July, 2026

A News 365Times Venture

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

Date:

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொடர்பான விதிகளின் அடிப்படையில் மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்மூலம், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெறவிருந்த டாக்டர் சாய்குமார், மேலும் ஆறு மாதங்கள் தலைமைச் செயலாளராக தொடர உள்ளார்.

டாக்டர் சாய்குமார் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் அவர் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

சாய்குமார் ஐ.ஏ.எஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், தலைமைச் செயலாளராக இருந்த சாய்குமார் தொடர்ந்து பதவியில் நீடித்தார்.

புதிய அரசு அமைந்தபின் தலைமைச் செயலாளரை மாற்றுவது வழக்கமான நிர்வாக மாற்றமாக கருதப்பட்டாலும், இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதை பரிசீலித்த மத்திய அரசு, 6 மாத பணி நீட்டிப்புக்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

டாக்டர் சாய்குமார், தமிழ்நாட்டின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். மதுரை, தர்மபுரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ள அவர், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், நகராட்சி நிர்வாக ஆணையம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"என் ​உடலை ஜூம் செய்து போட்டோ எடுத்து வலைதளத்தில் பகிர்ந்தனர்"- கேரள பெண் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

கேரள மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா...

பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" – முதல்வருக்கு EPS கேள்வி

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக...

சபரி வர்மன் லாக்கப் கொலை: "சிலரைக் காப்பாற்றுவதற்காக கைதிகள் மீது வழக்கு" – கனிமொழி குற்றச்சாட்டு

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வியாபாரி சபரி வர்மன் சிறை காவலர்களால்...

SIR: “வாக்காளர் திருத்தப் பணியில் ‘மத’ அரசியல்?"- கடிதம் எழுதிய ஐ.நா; விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

ஐ.நா கடிதம்கடந்த ஆண்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்...