16
July, 2026

A News 365Times Venture

16
Thursday
July, 2026

A News 365Times Venture

பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" – முதல்வருக்கு EPS கேள்வி

Date:

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோயில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்குத் தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்தப் பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.

தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!

பழனி

இந்தப் பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?

இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது.

இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு பவர் சென்டர் தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளைக் கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே பவர்சென்டர் என்று சொன்ன முதலமைச்சர் அவர்களே, இந்த ஊழலில் பின்னால் யார் அந்த பவர்சென்டர்?

அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனைப் பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்தப் பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்தப் பத்திரப் பதிவிற்காகத்தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த பவர்சென்டர்?

இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது என்பது, இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.

நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோயில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கட்சி தாவ தயாராகும் தேனிக்காரர் டு `அய்யாவை சந்திக்க முடியவில்லை' பா.ம.க சர்ச்சை! | கழுகார்

பா.ம.க-வில் வெடிக்கும் சர்ச்சை!"அய்யாவை சந்திக்க முடியவில்லை..."பா.ம.க-வில் தந்தையும் மகனும் இணைந்துவிட்ட நிலையில்,...

"என் ​உடலை ஜூம் செய்து போட்டோ எடுத்து வலைதளத்தில் பகிர்ந்தனர்"- கேரள பெண் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

கேரள மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா...

சபரி வர்மன் லாக்கப் கொலை: "சிலரைக் காப்பாற்றுவதற்காக கைதிகள் மீது வழக்கு" – கனிமொழி குற்றச்சாட்டு

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வியாபாரி சபரி வர்மன் சிறை காவலர்களால்...

SIR: “வாக்காளர் திருத்தப் பணியில் ‘மத’ அரசியல்?"- கடிதம் எழுதிய ஐ.நா; விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

ஐ.நா கடிதம்கடந்த ஆண்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்...