14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு… யாருடையது தெரியுமா? – கெஜ்ரிவால்

Date:

டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஆம் ஆத்மி கட்சியில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இன்று மதியம் மிக மிக மி முக்கிய விஷயம் குறித்து செய்தியாளர் சந்திப்பு’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 2 மணிக்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, “டெல்லி மக்கள் முன்பு இரண்டு மாடல்கள் தற்போது உள்ளன. ஒன்று மக்களின் பணம் மக்களுக்கே செல்லும் கெஜ்ரிவால் மாடல். இன்னொன்று, மக்கள் பணம் தங்களது பணக்கார நண்பர்களுக்குச் செல்லும் வகையிலான பாஜக மாடல். இதில் எந்த மாடல் வேண்டுமென்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கெஜ்ரிவால் மாடலா; பாஜக மாடலா?!

ஆம் ஆத்மி அரசால் ஒவ்வொரு மாதமும் டெல்லி மக்கள் 25,000 ரூபாய் வரையில் பலனடைகிறார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், அத்தனை நலத்திட்டங்களையும் நிறுத்திவிடும். காரணம், அந்தத் திட்டங்கள் அனைத்தும் அவர்களது மாடலுக்கு எதிரானது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்தியை ஆளும் பாஜக அரசு 400-500 பேருடைய ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. அந்த 400 – 500 பேரும் ஒருவகையில் பாஜக அரசின் பணக்கார நண்பர்கள் ஆவார்கள்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TN Budget Highlights | TASMAC – செந்தில் பாலாஜிக்கு சுத்துப்போடும் ED – Imperfect Show 14.03.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய்...

TN Budget 2025: 'சொன்னதைச் செய்வோம் என்பது காற்றில் போச்சு' – பட்ஜெட் குறித்து தலைமைச் செயலக சங்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம்...

'Senthil Balaji-க்கு, இனி ஒவ்வொரு நிமிடமும் ஷாக்தான்' – நெருக்கும் ED | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு...