9
May, 2026

A News 365Times Venture

9
Saturday
May, 2026

A News 365Times Venture

“சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' – அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

Date:

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.

அரிட்டாபட்டி மக்கள்

அரிட்டாப்பட்டி,  அ.வெள்ள்ளாளப்பட்டியில் ஊர் பிரமுகர்களால் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், முதலில் அரிட்டாப்பட்டி மந்தை திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். உள்ளூர் மக்கள் குறைவாகவே கலந்துகொண்டார்கள். அதனால், வெளியூரிலிருந்து மக்களை அழைத்து வந்து முதல்வர் வருகின்ற சாலை வழியில் நிறுத்தியிருந்தனர்.

மாலையில் அரிட்டாபட்டி வந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “திடீரென்று நான் இங்கு வந்ததற்கு காரணம், நேற்று இப்பகுதி மக்கள் வந்து என்னை அழைத்தார்கள். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது, அதற்கு எப்படிப்பட்ட அழுத்தத்தை மக்கள் தந்தார்கள் என தெரியும், அதனை உணர்ந்து உங்களில் ஒருவனாக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில், எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் பேசி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அது வெற்றி பெற்றுள்ளது, அதிமுக, பாமக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை நிறைவேற்றி கொடுத்தார்கள்.

மக்களால் ஆட்சியில் இருக்கும் நான், முதல்வர் பொறுப்பில் இருக்கும் வரை டங்ஸ்டன் வராது என்றேன், ஒரு வேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்றேன், எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என பெரியவர்கள் அழைத்தார்கள். உண்மையில் நன்றி உங்களுக்குத் தான் சொல்ல வேண்டும், நான் பிரித்து பேசவில்லை, வெற்றி நமக்கு கிடைத்துள்ளது, மீண்டும் ஒருமுறை உங்களை சந்திக்க வருவேன்.

அரிட்டாபட்டி

உங்களுடைய அன்பான முகத்தை, எழுச்சியான முகத்தை,சிரித்த முகத்தோடு பார்க்கின்றபோது உங்களோடு நீண்ட நேரம் பேசவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், மற்றொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப்பிறகு விமானத்தைப் பிடித்து சென்னைக்கு செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. நாளைக்கு வேறொரு மாவட்டத்திற்கு செல்லவேண்டும். அதனால், நீண்ட நேரம் பேசமுடியாது. அதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் சந்திக்க வருவோம்.

இன்னும் ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரவுள்ளது. அந்த தேர்தலில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் வீட்டுப் பிள்ளை எனக்கு ஆதரவு தாருங்கள். எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன்” என்றவர், டங்ஸ்டன் திட்ட ரத்து அறிவிப்பை கொண்டாடும் வைகயில் அவ்வூரைச் சேர்ந்த தம்பதியின் குழந்தைக்கு வெற்றி என்று பெயர் சூட்டினார்.

அரிட்டாபட்டி வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்கிற கோரிக்கை மனுவை ஊர் பிரமுகர்கள் தயார் செய்து முதல்வரிடம் கொடுக்க வைத்திருந்த நிலையில், அதை கொடுக்க விடாமல் காவல்துறையினரும், அதிகாரிகளும் தடுத்துவிட்டதாக மக்கள் புகார் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”எஸ்.காமராஜ் மீது சந்தேகம் இருந்தது”- தவெக ஆதரவு விவகாரம் கொதிக்கும் மன்னார்குடி அமமுகவினர்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ்....

புதிய முப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழர் – யார் இந்த ராஜா சுப்ரமணி?

இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை...

கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் – திமுக சாதித்த பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும்...

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய...