13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு… யாருடையது தெரியுமா? – கெஜ்ரிவால்

Date:

டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஆம் ஆத்மி கட்சியில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இன்று மதியம் மிக மிக மி முக்கிய விஷயம் குறித்து செய்தியாளர் சந்திப்பு’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 2 மணிக்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, “டெல்லி மக்கள் முன்பு இரண்டு மாடல்கள் தற்போது உள்ளன. ஒன்று மக்களின் பணம் மக்களுக்கே செல்லும் கெஜ்ரிவால் மாடல். இன்னொன்று, மக்கள் பணம் தங்களது பணக்கார நண்பர்களுக்குச் செல்லும் வகையிலான பாஜக மாடல். இதில் எந்த மாடல் வேண்டுமென்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கெஜ்ரிவால் மாடலா; பாஜக மாடலா?!

ஆம் ஆத்மி அரசால் ஒவ்வொரு மாதமும் டெல்லி மக்கள் 25,000 ரூபாய் வரையில் பலனடைகிறார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், அத்தனை நலத்திட்டங்களையும் நிறுத்திவிடும். காரணம், அந்தத் திட்டங்கள் அனைத்தும் அவர்களது மாடலுக்கு எதிரானது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்தியை ஆளும் பாஜக அரசு 400-500 பேருடைய ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. அந்த 400 – 500 பேரும் ஒருவகையில் பாஜக அரசின் பணக்கார நண்பர்கள் ஆவார்கள்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக – அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக...

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...