13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

3 ஆண்டுகள் கோமா… 47 வயதில் காலமானார் தாய்லாந்து பட்டத்து இளவரசி பஜ்ரகிதியாபா!

Date:

தாய்லாந்து நாட்டின் பட்டத்து இளவரசி பஜ்ரகிதியாபா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர், தனது 47-வது வயதில் காலமானார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து அரச குடும்பத்தின் மிக முக்கியத் தூணாகவும், அந்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு மக்கள் தலைவராகவும் விளங்கிய இவரது மறைவு, தாய்லாந்து வரலாற்றில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

பஜ்ரகிதியாபா

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பக் சோங் மாவட்டத்தில் தனது செல்லப் பிராணிகளுக்கான நாய் பயிற்சிப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது, இளவரசி பஜ்ரகிதியாபா திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் பாங்காக் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, இதயத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு காரணமாக மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டது கண்டறியப்பட்டது.

பஜ்ரகிதியாபா

அன்றிலிருந்து இன்று வரை சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அதிநவீன மருத்துவ உபகரணங்களின் உதவியுடனும், தீவிர மருத்துவக் கண்காணிப்பிலும் கோமா நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் தங்களின் முழு முயற்சியையும் செலுத்திய போதிலும், அவரது உடல்நிலை தேறாமல் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிதியாபா, வெறும் அரச குடும்பத்து வாரிசாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், ராஜதந்திரியாகவும் சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் ஆவார்.

மக்கள் அஞ்சலி

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், தாய்லாந்திற்கான ஆஸ்திரிய தூதராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளிலும் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலன்களுக்காக அவர் மேற்கொண்ட சர்வதேச அளவிலான சீர்திருத்தங்கள் உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்றன.

அந்நாட்டு அரசு, அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்தின் அடுத்த அரச வாரிசாக முடிசூட்டப்படுவார் என்று மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திறமையான இளவரசியின் மரணம், ஒட்டுமொத்த தாய்லாந்து மக்களையும் ஆழமான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஏழை மக்கள் பயன்படுத்தும் ஆவின் பச்சைப் பால் விற்பனை விரைவில் ரத்தா?' – அன்புமணி கண்டனம்

ஆவின் பால் நிறுவனத்தில் பச்சை நிறப் பால் பாக்கெட் விற்பனையைக் குறைத்துள்ளதற்கு...

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக...

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" – ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது....

'ஆபரேஷன் இரட்டை இலை' – மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்...