6
July, 2026

A News 365Times Venture

6
Monday
July, 2026

A News 365Times Venture

"ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கட்டணம் வசூலிக்கப்படும்; ஆனால், அது சுங்க வரி அல்ல" – ஈரான் புது பிளான்

Date:

ஹார்முஸ் நீர்ச்சந்தியில் சுங்க வரி வசூலிப்போம் என்று ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் அவ்வப்போது சொல்லி வருகிறது. ஆனால், இதில் மற்ற நாடுகளுக்கு உடன்பாடு இல்லை.

காரணம், ஹார்முஸ் நீர்ச்சந்தி இயற்கையாகவே அமைந்த உலகத்திற்கான பொது சொத்து ஆகும்.

ஆனால், பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மன்றத்தில் ஈரான் தூதர் அப்தோல்ரேசா ரஹ்மானி ஃபாஸ்லி ஹார்முஸ் நீர்ச்சந்தியில் ஈரான் சுங்க வரி வசூலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அப்தோல்ரேசா ரஹ்மானி ஃபாஸ்லி

இது குறித்து அவர் பேசியுள்ளதாவது…

“ஹார்முஸ் நீர்ச்சந்தி எங்கள் நாட்டின் எல்லையோரக் கடல் பகுதியின் ஒரு அங்கமாக இருப்பதால், அங்குப் பயணிக்கும் கப்பல்களுக்கு நாங்கள் நிச்சயமாகச் சேவை கட்டணம் வசூலிப்போம். இந்த நடவடிக்கையை ‘சுங்கக் கட்டணம்’ என்று குறிப்பிடக் கூடாது.

இந்த புதிய ஏற்பாடுகள் ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியிலான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், கப்பல்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கும் மட்டுமேயாகும்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடத்திற்கான புதிய ஏற்பாடுகள் குறித்தும், அங்கு அதிகளவிலான கப்பல்கள் செல்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கையாள்வது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஈரான் தற்போது ஓமனுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

கடினமான காலங்களில் எங்களுக்குத் துணையாக நின்று, எங்களுடன் நட்புப் பாராட்டிய நாடுகளுக்கு இந்தச் சேவை கட்டணத்தில் சில சிறப்புச் சலுகைகளை வழங்குவது குறித்து நாங்கள் நிச்சயமாகப் பரிசீலிப்போம்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போட்டோ ஷூட் என வரவழைத்து கொலை; தண்டவாளத்தில் சடலம் வீச்சு; விசாரணையில் வெளியான காதல் பின்னணி

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (24)....

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள்; கலெக்டருக்கு அபராதம் விதித்த நீதிபதி; காரணம் என்ன?

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பான விசாரணை,...

`Last Bench' சர்ச்சை: “தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்ள…" – நயினார் நாகேந்திரன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்...

`இறுதி சட்டப்பூர்வ வழியையும் இழந்தார் நிரவ் மோடி!' – இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது எப்போது?

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும்...