8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

"போர் தொடர்ந்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவு ஏற்படும்" – எச்சரிக்கும் சவுதி அராம்கோ CEO

Date:

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல் நீடித்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியத்தில் சுமார் 20% இந்த கடல் வழியாகத்தான் செல்கிறது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்த போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர்
சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர்

இந்த இடையூறு தொடர்ந்தால், உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உலக பொருளாதாரத்திலும் கடுமையானத் தாக்கத்தை இது ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி...

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு… திமுக-வுடன் உறவு!' – கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...

'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' – ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காததையடுத்து, ...

விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த சிபிஐ! – ஆதரவு கடிதத்தில் உள்ளது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய...