24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு… திமுக-வுடன் உறவு!' – கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

Date:

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ” ஜனநாயகத்திற்கு மக்கள் ஆதரவு அளித்த நிலையில் த.வெ.கவை ஆதரிப்பது என நாங்கள் முடிவெடுத்தோம். ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவே விஜய்க்கு ஆதரவு அளித்தோம்.

தவெக விஜய்

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்பது அவசியம். மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம்.

தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் ஒன்றிய பாஜக அரசு கொல்லைப்புறம் வழியே நுழைய முயற்சி செய்கிறது. அதனைத் தடுக்கவே த.வெ.கவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

இன்னொரு தேர்தலைத் தடுக்க, ஆளுநர் ஆட்சி, பாஜக வருகையைத் தடுக்க நாங்கள் த.வெ.கவை ஆதரிக்கிறோம். த.வெ.க அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். த.வெ.கவுடன் கூட்டணி அல்ல, ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு தந்திருக்கிறோம்.

சிபிஐ, சிபிஎம்
சிபிஐ, சிபிஎம்

த.வெ.க ஆட்சி அமையக் கூடாது என்று ஸ்டாலின் கூறவில்லை. ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறிக்கும்போது திமுகவுடன் இணைந்து போராடுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது' – நீதிபதிகள் வேதனை

தஞ்சையைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு...

`வரும் திங்கட்கிழமை' – தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர்...

பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான...

`அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

மதுரை மேலூரில் மாணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் நிகழ்வில் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை...