12
May, 2026

A News 365Times Venture

12
Tuesday
May, 2026

A News 365Times Venture

'பள்ளி, கல்லூரி அருகே இருக்கும் 717 மதுபான கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட வேண்டும்' – விஜய் அதிரடி

Date:

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அது குறித்து செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

டாஸ்மாக்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது.

மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

DMK: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி – பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு | Tamilnadu Live Updates

பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்புசிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் 'ஒரு...

தனித்தனியாக வந்த எடப்பாடி, வேலுமணி; பதவியேற்காத சி.வி சண்முகம்! – சட்டமன்றத்தில் அதிமுக கடாமுடா!

முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள்...

‘விஜய் திமுக-விடம் கடன் வாங்கி ஆட்சி நடத்துகிறார்!’ – பாஜக எஸ்.ஆர். சேகர்

விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்பட்டது சர்ச்சையானது....