17
July, 2026

A News 365Times Venture

17
Friday
July, 2026

A News 365Times Venture

திருவான்மியூர் – உத்தண்டி ECR உயர்மட்ட சாலை திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு!

Date:

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திட்டமிடப்பட்டுள்ள திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலை (Elevated Corridor) திட்டத்தின் செலவினை குறைக்கும் நோக்கில் தொழில்நுட்ப குழு அமைக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 13.3 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்ட சாலை திட்டத்தின் ஆரம்ப மதிப்பு சுமார் ₹2,100 கோடி என கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது அந்த செலவை ₹1,500 கோடி அளவுக்கு குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் கூறுவதாவது, திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் (Specifications) வழக்கமாக இதுபோன்ற சாலைத் திட்டங்களில் பயன்படுத்தப்படுவதை விட அதிக அளவில் இருப்பதால் கட்டுமானச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது.

AI படம்

குறிப்பாக, தூண்களின் வடிவமைப்பு, அடித்தள அமைப்பு, சாலை அகலம் மற்றும் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்கள் ஆகியவை தேவைக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை மறுஆய்வு செய்வதற்காக சிறப்பு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் விவரக்குறிப்புகளில் மாற்றம் செய்தால், மொத்த திட்டச் செலவில் 25% முதல் 30% வரை குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், திருத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதிய நிபந்தனைகளை ஒப்பந்ததாரர் ஏற்கும் பட்சத்தில் திட்டம் தொடரும் என்றும், மாற்றங்களை ஏற்க மறுத்தால் அவர் திட்டத்திலிருந்து விலகும் சூழலும் உருவாகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய உட்கட்டமைப்பு திட்டமாக கருதப்படும் இந்த உயர்மட்ட சாலை திட்டத்தின் எதிர்காலம், தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகள் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் மீது அமையும் என கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' – உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற...

'தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க திட்டமா?' – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 'ரெஸ்டோ பார்' எனப்படும் உணவகத்துடன் கூடிய...

“இந்த இரண்டு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது!" – கடந்த காலத்தை நினைத்து வருந்தும் வைகோ

மறுமலர்ச்சி திமுகவின் அதிராரபூர்வ ஏடான ‘சங்கொலி’யின் முப்பதாவது ஆண்டு விழா இன்று...

பாமக: “தமிழ்நாட்டின் உண்மையான விடுதலை மே 4-தான்; ஊடக சுதந்திரம் இருக்கிறது" – அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது....