26
July, 2026

A News 365Times Venture

26
Sunday
July, 2026

A News 365Times Venture

திருவண்ணாமலை: பள்ளி மாணவன் துடைப்பத்தால் தாக்கப்பட்ட விவகாரம் – சத்துணவு பணியாளர்கள் இருவரும் கைது

Date:

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட செங்குணம் கொல்லைமேடு பகுதியில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவ – மாணவிகளுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை சத்துணவு தயாரிக்கும் பெண் பணியாளர்களே வெளியில் விற்பனை செய்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்தச் சூழலில், அந்த அரசுப் பள்ளியில் சத்துணவு வழங்கியபோது முட்டை கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு `இல்லை’ எனச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்து கேள்வியெழுப்பியிருக்கிறான்.

இதனால் கோபமடைந்த சத்துணவு சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் முனியம்மாள் ஆகிய இருவரும் வகுப்பறைக்குள் புகுந்து மாணவனை துடைப்பத்தால் தாக்கிய காணொளியும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பெண் பணியாளர்கள்

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, சத்துணவு பணியாளர்கள் இருவரும் தங்களின் தவறை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் அவர்கள் இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், பெண் பணியாளர்கள் இருவர் மீதும் பி.என்.எஸ் சட்டப்பிரிவு 131 மற்றும் சிறார் பராமரிப்புப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 75 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, போளூர் காவல் நிலையப் போலீஸாரால் இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக...

'மெரினா, விஜய், ஆளுநர்..' கடும் வாக்குவாதத்தில் முடிந்த பாலன் இல்ல போராட்டம்? – பின்னணி என்ன?

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக தி.நகர் பாலன் இல்லத்தில் கடந்த...

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய...

Zoho: “நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' – கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை...