13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

திருச்செந்தூர் கோவில்: "25 லட்சம் ரூபாய்க்கு முறைகேடு; கண்காணிக்காதது ஏன்?" – நீதிபதி கேள்வி

Date:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதில் ரூ.100 டிக்கெட் பெறும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ரூ.100 டிக்கெட் வினியோகம் செய்ததில் ரூ. 25 லட்சத்து 24 ஆயிரத்தை கோவில் ஊழியர்கள் முறைகேடு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

அதன்பேரில் இந்தப் புகார் குறித்து விசாரிக்கப்பட்டதில் தற்காலிக பெண் ஊழியரான மேனகா என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் கணினி டிக்கெட்டுகளைச் சரி பார்க்காமலும் அலட்சியமாக இருந்ததாக கோவில் பணியாளர்கள் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”ரூ.25 லட்சம் வரை முறைகேடு நடந்து இருக்கிறது. இதனை உயர் அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காதது ஏன்? திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எத்தனை பக்தர்கள் வருகின்றனர். அவர்களால் எவ்வளவு வருமானம் வருகிறது. இந்த வருமானம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்வது அதிகாரிகளின் பணி தானே?” எனக் கேள்விகளை எழுப்பினார்.

விசாரணை முடிவில், இந்த முறைகேடு விவகாரத்தில் நடந்தது என்ன?, இதில் மனுதாரர்களின் பங்கு என்ன? என்பன குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' – கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of...