26
July, 2026

A News 365Times Venture

26
Sunday
July, 2026

A News 365Times Venture

”திமுக ஆட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது”-சீமான்

Date:

தஞ்சாவூரில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெ.மணியரசன், சீமான், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சீமான் பேசியதாவது, “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என கருணாநிதி முழங்கினார். ஆனால், தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என திமுக மாறிவிட்டது. மக்கள் ஆட்சியைத் தான், தன்னுடைய மக்கள் ஆட்சியாக மாற்றவிட்டனர் திமுகவினர்.

சீமான்

மாநில சுயாட்சி என பேசிக்கொண்டே மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் பறிக்கொடுத்துவிட்டனர். இன்று மாநில சுயாட்சி நாயகன் என பாராட்டு விழா நடத்துகின்றனர். தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, தமிழில் அரசாணை என கூறுகிறது. இத்தனை ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். எதற்கெடுத்தாலும் திராவிடர்கள் நாங்கள்தான் காரணம் என்கிறார்கள். நமது வாக்குகளை வாங்கிக்கொண்டு, வலிமை பெற்று அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு, இந்த இன மக்களின் உரிமைகளை பறிக்கொடுத்தவர்கள் இந்த ஆட்சியாளர்கள்.

பிரதமர் மோடி தமிழ் மொழியை பெருமையாகப் பேசுகிறார். உலக நாடுகளில் தமிழை கற்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தமிழ் இன்று இவர்களின் காலடியில் குறுகிக் கிடக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினரான ஆளுநருக்கு எப்படி வந்தது. இது மக்கள் கோட்பாடுகளுக்கு எதிரானது. இது குறித்துப் பேசத் துப்பில்லை.

தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்திய கூட்டரசுக் கோட்பாடு மாநாடு

நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என கூறியது திமுகதான். ஏனென்றால் பாஜக வின் ஏ டீம் திமுக தான். நீட் தேர்வு, ஜிஎஸ்டியைக் கொண்டு வந்தது காங்கிரஸ். கூட இருந்து கும்மி போட்டது திமுக தான். சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் வெற்று வார்த்தைகள். மாநில சுயாட்சி எனக் கூறி எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்கள் திமுகவினர். கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு எடுத்தபோது திமுக அமைதியாக இருந்துவிட்டது.

காஷ்மீரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் ராணுவ வீரர்களை கொன்றது எப்படி, பின்னர் ஆதார் கார்டு எதற்கு, என்ஐஏ அமைப்பு எதற்கு. எல்லையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பஹல்காமில் 200 கி.மீ. தூரம் எப்படி உள்ளே வந்து தீவிரவாதிகள் சுட்டனர். வந்தவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டிருந்தால் அது பெருமை கொள்ளக்கூடிய விஷயம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது....

“திமுக-வை வழிநடத்த தகுதியானவர் உதயநிதியா? கனிமொழியா? வாக்கெடுப்பு நடத்துங்க" – நிர்மல் குமார்

திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` நீட்...

"எங்களை வெளியேற்ற கூடாது" – தேனியில் கடையடைப்பு போராட்டத்தில் இறங்கிய மலைக் கிராம மக்கள்

தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மேகமலை, கண்டமநாயக்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும்...

தொகுதி மறுவரையறை மசோதா: 'அடுத்தகட்ட திட்டம் என்ன?' – கே.சி.வேணுகோபால் பதில்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க...