26
July, 2026

A News 365Times Venture

26
Sunday
July, 2026

A News 365Times Venture

"எங்களை வெளியேற்ற கூடாது" – தேனியில் கடையடைப்பு போராட்டத்தில் இறங்கிய மலைக் கிராம மக்கள்

Date:

தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மேகமலை, கண்டமநாயக்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.

இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் 2021ல் அறிவிக்கபட்டது. இந்தப் புலிகள் காப்பகத்தைக் காரணம் காட்டி அங்கிருக்கும் மக்களை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் மக்களை வெளியேற்றுவதற்காக துணை ராணுவ படையை நிலை நிறுத்தலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இந்தப் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட  கடைகளை அடைத்து, வனத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு மலைக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த மக்களுக்கு ஆதரவாக ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு, பிள்ளையார் கோவில் பகுதிகளில் வசிக்கும்  விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் உட்பட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

திமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்பு

உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போராட்டத்தில் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் முறுக்கோடை ராமர் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“திமுக-வை வழிநடத்த தகுதியானவர் உதயநிதியா? கனிமொழியா? வாக்கெடுப்பு நடத்துங்க" – நிர்மல் குமார்

திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` நீட்...

தொகுதி மறுவரையறை மசோதா: 'அடுத்தகட்ட திட்டம் என்ன?' – கே.சி.வேணுகோபால் பதில்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க...

கரப்பான் பூச்சி: “என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" – தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை...

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக...