26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

Date:

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று முதல் இச்சேவைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த ரயிலில் மொத்தமாக 12 பெட்டிகளில் ஏசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஏசி வசதியுடன் கூடிய இந்த ரயில், அதிகாலை 5:45 மணிக்கு தாம்பரம் பணிமனையிலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரையை வந்தடைந்து, 7 மணிக்கு இங்கிருக்குந்து புறப்பட்டு 8:45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

மேலும், பிற்பகல் 3:45 மணிக்கும், இரவு 7:35 மணிக்கும் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இந்த ஏசி ரயில் புறப்படும்.

அதேபோல், மறுமுனையில் செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கும், மாலை 5:45 மணிக்கு சென்னை கடற்கரையை நோக்கி இந்த ஏசி ரயில் புறப்படும்.

இந்த ரயில், வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.

மேலும், இந்த ஏசி ரயிலில் அதிகபட்ச கட்டணமாக சென்னை கடற்கரை டு செங்கல்பட்டுக்கு வரை ரூ. 105 வசூலிக்கப்படும். தாம்பரம் டு செங்கல்பட்டு ரூ. 85-ம், தாம்பரம் டு எழும்பூர் ரூ. 60-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35 ஆகும்.

இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் இந்த ஏசி புறநகர் ரயில் சேவையில் கட்டணங்கள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஸ்டாலினும் ஒருவர்..!" – CJP அபிஜித் தீப்கே

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே. டெல்லி ஜந்தர் மந்தரின்...

அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி...

கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்?

ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை...

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்எல்ஏ-க்கள்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்...