26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

வேலை தேடி வந்த இடத்தில் காதல்; எதிர்ப்பால் திருமணத்தை ரத்து செய்த தன்பால் ஈர்ப்பாளர்களான தோழிகள்

Date:

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியாற்றி வரும் இரு பெண்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு புனே மாவட்டம் ஆகும். மற்றொருவருக்கு மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக இரண்டு பேரும் புனே வந்தனர். அப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து வேலை தேட ஆரம்பித்தனர்.

அதோடு அவர்கள் போலீஸ் வேலைக்கும் தேர்வு எழுதினர். இத்தேர்வில் இரண்டு பேருக்கும் புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் வேலை கிடைத்தது. இதனால் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து ஒரின தம்பதியாக சேர்ந்து வாழ்ந்தனர்.

தங்களது இந்த இணைப்பைச் சட்டப்பூர்வமாக மாற்ற இரண்டு பேரும் முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ்களையும் அச்சடித்தனர்.

தங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இருவரும் திருமண அழைப்பிதழைக் கொடுக்க ஆரம்பித்தனர்.

இறுதியில் திருமணத்திற்கு விடுமுறை வேண்டும் என்று கோரி திருமண அழைப்பிதழுடன் தங்களது உயர் அதிகாரியைச் சந்தித்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது அதன் பிறகுதான் போலீஸ் நிலையத்தில் அனைவருக்கும் தெரிய வந்தது.

அதோடு இந்த விவகாரம் புனேயைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியவந்தது. அவர்கள் உடனே போலீஸ் நிலையத்திற்கு வந்து தகராறு செய்தனர். ஆனால் அங்கு இருந்த போலீஸார் இரு பெண்களின் முடிவில் தங்களால் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.

இருவரும் வரும் 30ம் தேதி திருமணம் செய்து கொள்ள தேதி குறித்து இருந்தனர். ஆனால் அதற்கான நேரம் நெருங்க நெருங்க திருமணத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரி அவர்கள் இரண்டு பேருக்கும் நெருக்கடி அதிகரித்தது.

குடும்பத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரின் நெருக்கடி காரணமாக இரண்டு பெண்களும் தங்களது திருமணத்தை ரத்து செய்துவிட்டனர். ஆனால் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி: இடிக்கப்பட்ட ரயிலடி விநாயகர் கோயில் – பின்னணியில் கிறிஸ்தவ மதபோதகரா? | முழுப் பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் ’இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபை’யை கிறிஸ்தவ மதபோதகர்...

புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடிதான்!' – சாடும் திமுக

புதுச்சேரியில் 2026-2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர்...

Tvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை!

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர்...

புதுச்சேரி: “எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” – சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதன்...