30
May, 2026

A News 365Times Venture

30
Saturday
May, 2026

A News 365Times Venture

கிரீன் வேஸ் இல்லத்தைக் காலி செய்யும் எடப்பாடி பழனிசாமி; ராயப்பேட்டையில் குடியேற காரணம் என்ன?

Date:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாகத் தான் வசித்து வந்த ‘செவ்வந்தி’ அரசு இல்லத்தைக் காலி செய்ய முடிவெடுத்துள்ளார்.

தற்போது அவர் எந்தவொரு அரசுப் பதவியிலும் இல்லாத காரணத்தால், விதிகளின்படி இந்த இல்லத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு புதிய வீட்டிற்குத் தனது இருப்பிடத்தை மாற்ற உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

சென்னையில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் அரசு பங்களாக்களில் ‘செவ்வந்தி’ இல்லம் மிகவும் பிரபலமாகும். எடப்பாடி பழனிசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றபோது இந்த இல்லம் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்தபோதும், பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் இதே இல்லத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.

அமைச்சராக, முதலமைச்சராக அவர் எடுத்த பல்வேறு முக்கிய அரசியல் முடிவுகளுக்கும், அ.தி.மு.க-வின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் இந்தச் ‘செவ்வந்தி’ இல்லமே பிரதான சாட்சியாகத் திகழ்ந்தது.

கடந்த 15 ஆண்டுகளாக அவரது அரசியல் வாழ்வின் உச்சகட்டப் பயணங்கள் அனைத்தையும் கண்ட இந்த இல்லத்தை, அவர் தற்போது காலி செய்வது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்திய ஆட்சி, அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தற்போது எந்தவிதமான அரசுப் பதவியிலும் இல்லை. இதன் காரணமாக, அரசு விதிகளின்படி அவர் வசித்து வந்த அரசு பங்களாவைத் திரும்ப ஒப்படைக்க வேண்டிய சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டிற்கு அவர் குடியேற உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக, அ.தி.மு.க-வின் தலைமை நிலைய அலுவலகமான ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’ ராயப்பேட்டையில்தான் அமைந்துள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி குடியேறவிருக்கும் புதிய இல்லமும் அதே ராயப்பேட்டைப் பகுதியிலேயே அமைந்துள்ளதால், கட்சி அலுவலகத்திற்கு அவர் எளிதாகச் சென்று வரவும், கட்சிப் பணிகளைத் தொய்வின்றி கவனிக்கவும் இது மிகவும் ஏதுவாக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க-வினர் தெரிவித்துள்ளனர்.

விரைவில் அவர் புதிய இல்லத்தில் முறைப்படி குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' – அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர், அருள்மிகு...

சரிவை நோக்கி மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம்? – போர்க்கொடி தூக்கும் மூத்த தலைவர்கள்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி சந்தித்த எதிர்பாராத தோல்வி,...

அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்: “ட்ரோல்களைக் கண்டுக்கொள்ளாதீர்கள்" – தெலங்கானா அமைச்சர் ஆதரவுக் குரல்

தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்...