16
April, 2026

A News 365Times Venture

16
Thursday
April, 2026

A News 365Times Venture

கழுகார் அப்டேட்ஸ் : `பெண்புள்ளி… நாகப்புள்ளி’ – மலர்க் கட்சியின் தமிழக நாற்காலி யாருக்கு?

Date:

மான்செஸ்டர் மாவட்டத்திலுள்ள ‘பசுமையான’ பல்கலைக்கழகத்தில், உச்சப் பொறுப்பில் இருந்தவரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவுபெற்றது. அவர், மீண்டும் அதே பதவிக்கு முயன்றுவருகிறாராம். அவருக்கு மேதகுவின் ஆதரவும் இருக்கிறதாம். மறுபுறம், பல்கலைக்கழகத்தின் மற்றோர் அதிகாரப்புள்ளியும், உச்சப் பொறுப்புக்கு வர முயன்றுவருகிறாராம். அவருக்கு மாண்புமிகுவின் ஆதரவு இருக்கிறதாம்.

இப்படிப் பதவிக்காக நடக்கும் போட்டியால், பல்கலைக்கழகத்தில் கோஷ்டிகள் உருவாகி, சண்டைகளும் வெடிக்கின்றனவாம். இதனால், பல்கலைக்கழகப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘இதற்கு விரைவிலேயே தீர்வு காணவில்லையென்றால், பல்கலைக்கழகப் பஞ்சாயத்து வீதி வரைக்கும் வந்துவிடும்’ என்கிறார்கள் பேராசிரியர்கள்!

டெல்டா மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில், இலைக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற லோக்கல் மாஜி, மாவட்டப் பிரதிநிதி ஒருவரை மரியாதைக் குறைவாகத் திட்டித் தீர்த்திருக்கிறார். அந்த மாவட்டப் பிரதிநிதி அன்று இரவே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

‘மாஜி திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளாகித்தான் அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். இது குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்காமல், விவகாரம் மூடிமறைக்கப்பட்டுவிட்டது’ என்று சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்தவுடன், ‘திடீரென’ இலைக் கட்சித் தலைமையை மாஜிப் பிரமுகர் சந்தித்துப் பேசியிருப்பது, இலைக் கட்சிக்குள் பல்வேறு சந்தேகத் தீயைப் பற்றவைத்திருக்கிறது!

சூரியக் கட்சியின் பொதுக்குழு தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கும் சூழலில், ‘அணிகள் தொடங்கி அனைத்து நியமனங்களையும் விரைவில் முடித்தாக வேண்டும்’ என்று `கறார்’ உத்தரவு போட்டிருந்தது சூரியக் கட்சியின் தலைமை. ஆனாலும், ஒரு சில அணிகளைத் தாண்டி இன்னும் பல அணிகளின் நியமனங்கள் முழுமையடையவில்லையாம். ‘அதற்கு மாவட்டச் செயலாளர்களின் தலையீடுதான் காரணம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதாவது, ‘சார்பு அணிகளுக்கு நாங்கள் கைகாட்டும் ஆட்களைத்தான் நியமிக்க வேண்டும்’ என்று `கறார்’ காட்டும் மாவட்டச் செயலாளர்கள், தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்குப் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்களாம். அதனால்தான், நியமனங்களை நேரத்தில் முடிக்க முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறதாம். இந்தத் தகவல் மேலிடத்துக்குச் செல்லவே, ‘ஏப்ரல் இறுதிக்குள் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை என்றால், உங்கள் இடம் மாற்றப்படும்’ என்று மாவட்டச் செயலாளர்களிடம் கறார் காட்டியிருக்கிறதாம் தலைமை!

அகில இந்திய அளவில், சில மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறது மலர்க் கட்சித் தலைமை. அந்த வகையில், ‘தமிழகத்திலும் மாற்றம் வரலாம்’ என்கிறார்கள் அந்தக் கட்சியினர். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, ஆளாளுக்கு டெல்லிக்குப் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘மாநிலத் தலைமையைப் பிடித்தே ஆக வேண்டும்’ என்று உறுதியாக இருக்கும் கொங்குப் பெண்புள்ளி, தமிழகத்தைச் சேர்ந்த வீரப் பெண்மணி பெயரில் சமீபத்தில் டெல்லியில் விழா எடுத்தார். அந்த விழாவுக்கு, மலர்க் கட்சியின் சீனியர் தலைகளையெல்லாம் வரவழைத்து ‘வெயிட்’ காட்டியிருக்கிறார்.

அதேநேரம், தென்மாவட்டத்தைச் சேர்ந்த நாகப்புள்ளிக்கும் ‘யோகம்’ அடிக்கலாம் என்கிறது மலர்க் கட்சி வட்டாரம். ‘அவரின் சமூகம், தனிப்பட்ட செல்வாக்கு, இலைக் கட்சியுடனான தொடர்பு என எல்லாவற்றையும் கணக்கு போட்டு, தலைமைப் பதவிக்கு அவர் பெயரையும் பரிசீலனை செய்கிறது டெல்லி’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இன்னும் ஒரு வாரத்தில் மாற்றத்துக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுவதால், மலர்க் கட்சியில் அனல் பறக்கிறது!

தலைநகரில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவம், காவல்துறையில் இருக்கும் பல ஓட்டைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. அதில் ஒன்று, வாக்கி டாக்கி பற்றாக்குறை. அதாவது, சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு, வாக்கி டாக்கி மூலமாக ஆர்டர் போட்டிருந்தது சென்னை பெருநகரக் காவல்துறை. ஆனால், வாக்கி டாக்கி பற்றாக்குறை காரணமாக, சப்-இன்ஸ்பெக்டர்கள், பீட் ஆபீஸர்களாக இருக்கும் தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோரிடம் அந்தத் தகவல் உடனடியாகப் போய்ச் சேரவில்லையாம்.

வாக்கி டாக்கி

ஒவ்வொருவரையும் செல்போனிலேயே அதிகாரிகள் ஒருங்கிணைத்து, விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘தலைநகரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் வாக்கி டாக்கிகள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறதாம். இந்தத் தகவல் டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகளுக்குத் தெரிந்தாலும், சில பழைய வில்லங்க விவகாரங்களை முன்வைத்து, புதிய வாக்கி டாக்கிகளை வாங்க நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்’ என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“உங்கள் மைக் மட்டும்தான் வேலை செய்யாமல் போகிறது" – ராகுல் குற்றச்சாட்டும் சபாநாயகர் பதிலும்!

பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைத் திருத்துவதற்கும், தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைப்பதற்கும்...

“ `நற்பேறு' – இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது" – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி

நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் மையங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும்...