2
September, 2026

A News 365Times Venture

2
Wednesday
September, 2026

A News 365Times Venture

கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய வாழவாய்க்கால்: கேள்விக்குறியான சுகாதாரம்; முகம்சுளிக்கும் மக்கள்!

Date:

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள வாழவாய்க்கால் பகுதியில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வாழவாய்க்கால் பகுதிக்கு காவிரி ஆற்றின் கிளை நதியான வெண்ணாற்றின் கிளை ஆறுகள் மற்றும் வடிகால் அமைப்புகள் மூலம் தண்ணீர் வருகிறது. கல்லணையில் இருந்து வெண்ணாறு வழியாக வரும் காவிரி பாசன நீரும், மழைக்காலங்களில் பாண்டவையாறு மற்றும் அதன் வடிநிலப் பகுதிகளில் இருந்து வரும் உபரி மற்றும் வடிகால் நீரும் வாழவாய்க்கால் வழியாக செல்கின்றன.

இந்நிலையில், வாழவாய்க்கால் பகுதியையொட்டி செயல்படும் சுமார் 5 முதல் 6 மீன் கடைகளில் மீன் வெட்டிய பின் மீதமாகும் மீன் தலை, தோல், நண்டு உள்ளிட்ட கழிவுகள் கடைகளின் பின்புறப் பகுதிகளில் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் பல நாள்கள் கிடப்பதாகவும், சில நேரங்களில் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை கிடக்கும் மீன் தலை உள்ளிட்ட கழிவுகள் அழுகி புழுக்கள் உருவாகும் நிலை ஏற்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், அருகிலுள்ள வீடுகளுக்கும் துர்நாற்றம் பரவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மீன் கழிவுகள் மட்டுமன்றி, சிறு உணவகங்களில் இருந்து வெளியேறும் உணவுக் கழிவுகள் மற்றும் மண்டபங்களில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளும் இப்பகுதியில் கொட்டப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சில சிறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வரும் கழிவுகளும் அங்கு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் மீன் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் ஒரே பகுதியில் குவிந்து கிடப்பதாகவும், கழிவுகள் நீண்ட நாள்கள் அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் ஈக்கள், புழுக்கள் உள்ளிட்டவை உருவாகும் நிலை ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடியிருப்புகளுக்கு அருகிலேயே கழிவுகள் கொட்டப்படுவதால் குழந்தைகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குழந்தைகள் நடமாடும் மற்றும் விளையாடும் பகுதிகளுக்கு அருகில் அழுகிய உணவு மற்றும் மீன் கழிவுகள் கிடப்பதால், அவர்களின் உடல்நலம் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கழிவுகள் சாலையோரப் பகுதிகளிலும் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். சாலையோரத்தில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

வாழவாய்க்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்து கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதால், கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மீன் கடைகள், உணவகங்கள், மண்டபங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் இருந்து உருவாகும் கழிவுகளை முறையாக அகற்றி, குடியிருப்புகள் மற்றும் நீர்வழிப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவு மேலாண்மை செய்ய வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கார்ட்டூன்

Source link

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை...

தமிழ்நாட்டில் GST வசூல் 1% குறைந்துள்ளது; தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? – TRB ராஜா கேள்வி

தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப்...

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என தமிழக வெற்றிக் கழக...