26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

“அடுத்த 24 – 36 மணிநேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தலாம்..'' – பாகிஸ்தான் அமைச்சர் சொல்வதென்ன?

Date:

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் இடையே உறவு மிக மோசமடைந்து வருகிறது.

இதனால், ‘இன்னொரு போர் உலகில் உண்டாகிவிடுமோ?’ என்று உலகமே அச்சத்தில் உள்ளது.

நேற்று, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. அதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார்

அடுத்த 24 – 36 மணிநேரத்தில்…

“இந்தியா பாகிஸ்தான் மீது அடுத்த 24 – 36 மணிநேரத்தில் ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த உளவுத்துறை தகவல் வந்துள்ளது. இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பலமான அடி திரும்பக் கொடுக்கப்படும்.

நாடு தங்களது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை தேவையான அனைத்து வழிகளிலும் பாதுகாக்கும். இந்தியா பாகிஸ்தான் மீது போரை திணிக்க முயன்றால், அதனால் ஏற்படும் பேரழிவிற்கு இந்தியா மட்டுமே பொறுப்பு.

பாகிஸ்தான் கடுமையாக…

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது என்று எந்த ஆதாரத்தையும் இந்தியா வழங்கவில்லை. ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை திட்டமிட்டுள்ளது.

நீதிபதியாகவும், நடுவராகவும், மரணதண்டனை நிறைவேற்றுபவராகவும் இருக்கும் இந்தியாவின் பழக்கத்தை பாகிஸ்தான் திட்டவட்டமாகவும் கடுமையாகவும் நிராகரிக்கிறது” என்று பேசியுள்ளார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல… இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! – மத்திய அரசு சொல்வதென்ன?

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' -...

`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' – கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம்...

`எனக்கெதிராகப் போராட்டம் நடத்தினால் சுடுகாட்டுக்கு தான் போவீர்கள்!'- அணிமாறிய உத்தவ் எம்.பி மிரட்டல்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள்...

பெ.சண்முகம்: "போர் யானை சும்மா இருக்காது" – முரசொலிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு...