8
August, 2026

A News 365Times Venture

8
Saturday
August, 2026

A News 365Times Venture

"விஜய் அஞ்சி சென்றார்; நாங்கள் ஓடி ஒளிய மாட்டோம்" – திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின்

Date:

வழக்கு விசாரணைக்கு பிறகு சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“கடந்த 2025-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அப்போது, கரூரில் இருந்து திருச்சி வந்த தற்போதைய முதலமைச்சர் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்தச் சமயத்தில், திருச்சி விமான நிலையத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

உதயநிதி

ஆனால், அந்தத் துயரத்திற்குப் பதிலளிக்க மனமில்லாமல், செய்தியாளர்களை எதிர்கொள்ள அஞ்சி அவர் எதற்கும் பதில் சொல்லாமல் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார். ஆனால், நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. எத்தகைய இக்கட்டான சூழ்நிலை வந்தாலும், எவ்வளவு கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டாலும், செய்தியாளர்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பதில் சொல்லும் தைரியம் எப்போதும் நமக்கு உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதை விட்டு ஓடி ஒளிய மாட்டோம்” என காட்டமாகத் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிப்பதற்கே ஆன்லைன் பரிவர்த்தனை’ – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்...

2021 – 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது...

அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது. ஈரானும் சரி......

மயிலாடுதுறை சந்திப்பு: புது கழிவறைக்கு பூட்டு; பழைய கழிப்பறையால் போக்குவரத்து நெரிசல்; மக்கள் சிரமம்

மயிலாடுதுறை ரயில் சந்திப்பானது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் நெடுந்தூரப் போக்குவரத்திற்கு...