13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

"தேர்தல் பிரச்சார MOOD-ல் இருந்து அவர் வெளிய வரல.!”- முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்

Date:

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இன்று (ஜூன்.2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சிக்குச் சென்றிருந்தார். அவர் இன்னும் தேர்தல் பிரசார Mood-ல் இருந்து வெளிவராத மாதிரி தோன்றுகிறது. அவர் அரசாங்க Mood-க்கு வர வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்

முதலமைச்சர் ஆகிவிட்டார். மக்கள் அவருக்கு வாய்ப்பு அளித்திருகிறார்கள். அவர் பெண்களின் பாதுகாப்பிற்காக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நான் கோயம்பேடு வழியாகத் தான் வந்தேன். கோயம்பேட்டில் பட்டப்பகலில் கார் ஏற்றி ஒரு இலங்கை பெண் கொல்லப்பட்டிருக்கிறார். பாரில் ஏற்பட்ட பிரச்னையால் கொல்லப்பட்டிருக்கிறார். இதனைச் சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது.

‘6 மாதம் விமர்சிக்க மட்டோம் என்று சொன்னார்கள் ஆனால் 6 நாள்களிலியே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்’ என்று முதல்வர் சொல்கிறார்.

எதிர்க்கட்சிகள் விமர்சிக்காமல் இருக்க முடியாது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் இன்னும் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

வேறு கட்சியில் இருந்து ஆட்களை சேர்க்கின்ற கவனத்தை பெண்கள் பாதுகாப்பில் செலுத்த வேண்டும் என்பது எங்களது தாழ்மையான வேண்டுகோள்.

Black & White-ல் தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்படி இருந்தால் பரவாயில்லை. ஆனால் மொத்தமாக Black-ஆக மாறிவிடப்போகிறது. அமைச்சர்களை அழைத்து நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' – கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of...

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' – அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த...