26
April, 2026

A News 365Times Venture

26
Sunday
April, 2026

A News 365Times Venture

“தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' – நேபாளம் அறிக்கை!

Date:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பத்திரிகை செய்தியில்,

“ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாளி உட்பட அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரைப் பறித்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் மோதல் குறித்து நேபாளம் மிகுந்த கவலைகொள்கிறது.

தீவிரவாத தாக்குதல் நடந்த துயரமான நேரத்தில் இந்தியாவும் நேபாளம் ஒன்றுபட்டு நின்று துயரத்தைப் பகிர்ந்துகொண்டன.

இந்தியா-நேபாளம்

நேபாளம் உடனடியாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தது, இதன் மூலம் அனைத்து வகையான பயங்கரவாதத்துக்கும் எதிராக நிற்கும் எங்கள் உறுதிப்பாட்டை நினைவுகூரலாம். தீவிரவாதத்துக்கு எதிரான சண்டையில் நேபாளம் முழுமையாக உடன் நிற்கிறது.

எங்கள் கொள்கை நிலைப்பாட்டின் படி, எங்கள் அண்டைநாட்டுக்கு எதிராக எந்த ஒரு விரோத சக்தியும் எங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

பதற்றத்தைத் தணித்து பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" – ட்ரம்ப் பேச்சு

நேற்று வாஷிங் டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டின்னர் நிகழ்ச்சி நடக்கவிருந்தது....

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம்...

"ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்" – மோடி பதிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம்...

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில்...