17
May, 2025

A News 365Times Venture

17
Saturday
May, 2025

A News 365Times Venture

'தவம் இருக்கிறார்கள் என அதிமுகவை சொல்லவில்லை' – அண்ணாமலை புது விளக்கம்

Date:

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நான் நேற்று பேசும்போது அதிமுக என்று எங்கேயும் சொல்லவில்லை. தொலைக்காட்சியில் வேலை இல்லாதவர்களை வைத்து விவாதம் நடத்துவதற்கு நாங்கள் சொன்னதை திரிக்க வேண்டாம்.

அண்ணாமலை

நானும், எடப்பாடி அண்ணனும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளோம். நான் அதிமுக தவம் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை.

பாஜகவின் நிலைப்பாட்டை தான் சொல்லி இருக்கிறேன். அதிமுகவைப் பற்றி எடப்பாடி அண்ணன் பேசியிருக்கிறார். விவாத நிகழ்ச்சியில் அமர்பவர்கள் பாஜகவுக்கு எதிராக இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அவர்களுக்கு கள நிலவரம் தெரியவில்லை. இந்த மாதிரி கூட்டணி வர வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் முடிவு செய்கின்றனர். இதற்கு நானும் எடப்பாடியாரும் எப்படி பேச முடியும்.” என்று கூறினார்.

முன்னதாக அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ‘எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டும் தான் கூட்டணி.’ என்று கூறியுள்ளாரே.” என கேள்வி எழுப்பினர்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பாஜக தீண்ட தகாத கட்சி.. நோட்டா கட்சி.. அவர்களுடன் கூட்டணி வைத்த காரணத்தால் தோல்வியடைந்தோம். என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

NEP: “கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான் ஒரே வழி..'' – முதல்வர் ஸ்டாலின்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை...

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

'ரஷ்யா - உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?', 'புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து...

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' – அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை...

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி...