14
August, 2026

A News 365Times Venture

14
Friday
August, 2026

A News 365Times Venture

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

Date:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ரச்னாத்மக் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டிருக்கிறார். அந்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “மத்திய அரசுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியவில்லை.

மோடி – மெலோனி

தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கை என்று மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்திருக்கிறார். இதை நேரடியாகச் செய்து காட்டுவதற்காக, மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்திருக்கிறார்.

அப்போது சந்தீப் தீட்சித், “இத்தாலி பிரதமர் மெலோனி என்று நினைத்து என்னைக் கட்டிப்பிடிக்கவில்லையே?” என ஜோக்காகக் கேட்க, அதற்கு ராகுல் காந்தி, “நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

இந்த உரையாடல் பாஜக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தி மற்றும் சந்தீப் தீட்சித் பேச்சுக்கு பாஜக-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அந்த வகையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, “ராகுல் காந்தியின் பேச்சும் நடத்தைகளும் நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து வருகின்றன. நாட்டின் பிரதமர் மற்றும் இத்தாலி நாட்டின் தலைவர் குறித்துப் பயன்படுத்திய தரமற்ற சொற்கள் நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல” எனக் கண்டித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மீனவர்கள் கைது: `கடமைக்கு கடிதம்; ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம்..!' – தவெக அரசை சாடும் உதயநிதி

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை...

"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" – அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது....

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders அமைப்பில் அடுத்தகட்டமாக மாநில மற்றும்...

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!' – மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு' முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும்...